Wednesday, April 26, 2017

ஐஏஎஸ்...

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற சிவில் சர்வீசஸ் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் முதன்மைச் செயலர் வெ.இறையன்பு சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஐஏஎஸ் தேர்வு எழுதுவது என முடிவெடுத்தால் தட்டிக் கொடுப்பவர்களைக் காட்டிலும் தட்டிக்கழிப்பவர்களே அதிகம். அரசு பணி என்பது சமூக சேவைக்கு நம்மை அர்ப்பணிக்கு்ம பணி. ஐஏஎஸ் என்பது ஒரு வேலை அல்ல. மக்களின் கண்ணீரைத் துடைப்பதற் கும் மக்களோடு பயணிப்பதற் குமான பணி. தலைமைப்பண்பு, தெளிவான பார்வை இரண்டும் இந்தப் பணிக்கு அவசியம். அறிவும், ஈடுபாடும், பணியாற்றும் ஆர்வமும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.

இத்தேர்வுக்கு பரந்து பட்ட வாசிப்பு தேவை. பாடப் புத்தகங்களைத் தாண்டி பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். செய்தித்தாள்களை முறையாக படிக்கும்போது பொது அறிவு வளரும். ஆழ்ந்த வாசிப்பு ஐஏஎஸ் தேர்வுக்குப் பெரிதும் கைகொடுக்கும்.

கல்லூரி தேர்வுக்கும் போட்டித் தேர்வுக்கும் அடிப்படை வேறுபாடு என்னவெனில், கல்லூரியில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால், போட்டித்தேர்வில் தேர்ச்சி என்பது கிடையாது. தேர்வில் தகுதி பெற வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக் குத் தயாராகிவிட வேண்டும். விருப்பப் பாடத்தை தேர்வுசெய்யும் போது சொந்த விருப்ப அடிப் படையில் தேர்வுசெய்ய வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன் னார், இந்த பாடம் அதிக மதிப் பெண்களைப் பெற்றுத்தரும், அந்த பாடம் மிகவும் எளிதாக இருக்கும் என்ற நிலையில் விருப்பப்பாடத் தேர்வு அமைந்துவிடக்கூடாது.

வெறும் மனப்பாட சக்தி கொண்ட வர்களால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது. காரணம் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் 30 சதவீதம் அறிவு சார்ந்ததாகவும், 40 சதவீதம் புரிதல் சார்ந்ததாகவும் எஞ்சிய 30 சதவீதம் பரிசீலனை செய்து எழுதுவது சார்ந்ததாகவும் அமைந்திருக்கும். தினமும் 12 மணி நேரம் படித்தால் போதும். தேர்வுக்குப் படிக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தூக்கத்தை தியாகம் செய்துவிடக்கூடாது. தினமும் 7 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். அட்டவணை போட்டு படிப்பது சிறப்பு. ஒரே பாடத்தைப் படித்தால் சலிப்பு தட்ட லாம். அதற்கு சுழற்சி முறையில் பாடங்களைப் படிக்க வேண்டும். படிப்பதைச் சுமையாக கருதாமல் சுகமாக கருதி படிக்க வேண்டும். இவ்வாறு இறையன்பு கூறினார்.

சைலேந்திரபாபு
தமிழக கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டிஜிபி சி.சைலேந் திரபாபு பேசும்போது கூறியதாவது:
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என்றால் பெரிய, கவுரவமிக்க பதவி. சைரன் காரில் செல்லலாம் என்று நினைக்காமல் நாட்டு முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், ஊழலை ஒழிக்கவும் வாய்ப்பு தரக்கூடிய பதவியாக கருத வேண்டும். உயர்ந்த நோக்கம் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றியைத் தந்துவிடாது. கடின உழைப்புதான் வெற்றியை தரும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதுதான் மிகவும் சிரமம். இத்தேர்வில் வெற்றிபெற்றுவிட் டால் மெயின் தேர்வுக்கு உங்களுக்கு தமிழக அரசே உணவு, தங்குவசதி, மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை கொடுத்து பயிற்சி அளித்துவிடும். என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ புத்தகங்கள் படித்தால் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

செய்தித்தாள்கள் வாசிப்பு மிக மிக முக்கியம். முதல்நிலைத் தேர்வில் சி-சாட் தாளில் ரீசனிங் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இதற்கு பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு பயிற்சியில் ஈடுபடுவது ஒரு கட்டத்தில் விளையாட்டுபோல் இருக்கும். எதையும் ஆர்வமாக படிக்க வேண்டும். எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பெரிய சாதனைகள் என்பவை சின்னச் சின்ன சாதனைகளின் கூட்ட மைப்புதான். எனவே, கல்லூரியில் படிக்கும்போது பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

அது சிவில் சர்வீசஸ் தயாரிப்புக்கு உங்களுக்கு உற் சாகத்தை தரும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றால் சின்ன வயதில் பெரிய பொறுப்பு கிடைக் கும். நாட்டின் நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம். ஐஏஎஸ் தேர்வு ஒரு கடினமான தேர்வு அல்ல. அதற் காக எளிதான தேர்வு என்றும் சொல்லிவிட முடியாது. இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

கோ.பிரகாஷ் - நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் பேசும்போது கூறிய தாவது:
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் பெரிய குடும்பப் பின்னணி, பெரிய அந்தஸ்து, நல்ல உடல் தோற்றம் இருக்க வேண்டும் என்று சொல்லப் படுவதெல்லாம் வெறும் மாயை. இதில் எள்ளளவும் உண்மை யில்லை. திட்டமிட்ட கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமாலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறலாம். ஓரளவுக்கு ஆங்கிலப்புலமை இருந்தால் போதும். இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுபவர்களை ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்களாக பார்க்க வேண்டிய அவசியமில்லை.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படைத்தேவை ஒன்று ஆர்வம், இன்னொன்று தாகம். இவை இரண்டும்தான் உந்து சக்தி, தூண்டுகோல். இத்தேர்வுக்கு வாசிப்பு பழக்கம் மிக மிக அவசியம். கல்லூரி செமஸ்டர் தேர்வைப் போல் அல்லாமல் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளரும், தினமும் செய்தித்தாள் வாசிப்பு முக்கியம். செய்தித்தாள்களை வாசிக்கும்போது உலகத்தைப் பற்றிய பார்வை மாறும். சிந்தனை பளிச்சிடும். பலதரப்பட்ட புத்தகங்களை வாசிப்பது ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்குப் பெரிதும் உதவும்.

ஐஏஎஸ் அதிகாரியானால் லட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். நாம் போடும் ஒரு கையெழுத்து பல மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு பிரகாஷ் கூறினார்.

வீ.நந்தகுமார்
வருமானவரித்துறை இணை இயக்குநர் வீ.நந்தகுமார் பேசும்போது, ‘‘படிப்பு என்பது வேறு, போட்டி வேறு, போட்டித்தேர்வில் நமக்கு தெரியாமல் ஏராளமானோர் நம்மோடு போட்டிபோடுவார்கள். ஐஏஎஸ் தேர்வு என்பது வெறும் அறிவை சோதிக்கும் தேர்வல்ல. நமது ஆளுமையை, முடிவெடுக்கும் திறமையை சோதிக்கும் தேர்வாகும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புவோர் முதலில் தங்கள் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு அதை சரிசெய்ய வேண்டும். அடிப்படையில் நான் ஒரு குழந்தை தொழிலாளி. அதுவும் கற்றல் குறைபாடு உடைய மாண வன். எனக்கு இந்த குறைபாடு முதலில் தெரியாது. அக்குறை பாடு தெரிந்த பின்னர் அதற் கேற்ப என்னைத் தயார்படுத் திக்கொண்டேன். சாதாரண மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புகள் எனக்கு கிடைக்க வில்லை. ஆனாலும், 6 லட்சம் பேருடன் போட்டியிட்டு தேர்வில் வெற்றிபெற்றேன்’’ என்றார்.

வெங்கடேஷ் நாராயண்
முன்னதாக, ஐஆர்ஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் நாராயண் சிவில் சர்வீசஸ் தேர்வுமுறை குறித்து அறிமுகவுரை ஆற்றினார்.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், மதிய உணவும் அளிக் கப்பட்டது. ‘தி இந்து’ தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் திறனறித்தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற 3 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பயிற்சி இலவசமாக அளிக்கப்படும்.

Friday, April 7, 2017

கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்...

இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதை சமாளிக்க கோடை காலத்தில், கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 9 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இனிவரும் நாட்களில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை கூட 82.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கம் நிலவவும் வாய்ப்பு உள்ளது.

இயல்பை விட வெப்பம் அதிகரிப் பதால், இந்த கோடையில் பொது மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். உடலில் அதிக நீர் இழப்பு ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுவது தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் கூறியதாவது:
வெயிலின் தாக்கத்தால் உடலில் வியர்வை வெளியேறி வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக் காதவர்களுக்கு சிறுநீரக கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தடுப்பு முறைகள்
தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண் டும். இதனால் சிறுநீர் கல் ஏற்படு வதை தடுக்க முடியும். நீர் சத்துள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற வற்றை அதிகமாக உட்கொள்ள வேண் டும். பழச்சாறு, இளநீர், மோர் பருக வேண்டும். கார்பைடு கல் வைத்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. முடிந்தவரை இறுக்கமான ஆடை களை தவிர்த்து, தளர்வான மெல் லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல் பவர்கள் கண்டிப்பாக தொப்பி அணிந்தோ அல்லது குடை பிடித்தோ செல்ல வேண்டும். காலணி அணியா மல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிக்க வேண்டும்.

உணவு முறை
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் அளவோடு சாப்பிடலாம். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு
பச்சிளம் குழந்தைகள் உட்பட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே அழைத்து செல்லக் கூடாது. வெளியே அழைத்துச் செல்ல அவசியம் ஏற்பட்டால் குழந்தைகளை துணியால் மூடித்தான் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட விடக்கூடாது.
இவ்வாறு டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப் கூறினார்.

8 நகரங்களில் வெயில் சதம்
நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி வேலூரில் 106.16, வேலூரில் 104, சேலத்தில் 103.1, மதுரை, திருப்பத்தூர், பாளையங்கோட்டையில் தலா 102.92, திருச்சியில் 102.02, தருமபுரியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.