Friday, November 13, 2015

குரூப் - 2A தேர்வு- EXTENSION OF LAST DATE

விண்ணப்பிக்கும் கடைசி தேதி நவ. 18.
தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நவ. 20.
[குரூப் - 2ஏ தேர்வுக்குநவ., 11 வரை விண்ணப்பிக்கலாம் என,அறிவிக்கப்பட்டிருந்தது. ]
தேர்வுக்கு விண்ணப்பிக்கஆன்லைனில் நிரந்தர பதிவு அவசியம்.
நிரந்தர பதிவு முடித்துபதிவுக்கட்டணம் செலுத்திய பிறகே,தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க முடியும்
ஏற்கனவேபழைய முறைப்படி நிரந்தர பதிவு செய்தோர்அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும்,பாஸ்வேர்டு பயன்படுத்திபுதிய முறை நிரந்தர பதிவில்தங்களின் சுய விவர பக்கத்தை ஏற்படுத்திய பின்,தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 
இணைய வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள்தாலுகா அலுவலகங்களில் உள்ளபொது இ - சேவை மையங்களில்நிரந்தர பதிவு செய்துதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

Thursday, November 12, 2015

GDS Committee formed....?



Dept of Posts has constituted Gramina Dak Sewak Committee to go through the issues relating to Gramina Dak Sewaks . Now the Postal Directorate has appointed Sri T.Q.Mohammad (IPoS 1994), PMG, Agra region UP Circle as Secretary of the said Gramina Dak Sewak Committee 

=www.fnpo.org

Sunday, November 1, 2015

Exam News...

TNPSC Group-II A Examination | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு :


விண்ணப்பிக்க:  
Last date: 11.11.2015

 www.tnpscexams.net
 www.tnpscexams.in

தேர்விற்கான பாடத்திட்டம் & தேர்வுத்திட்டம்: 
www.tnpsc.gov.in

**************************************************************************************
Exam date: 24.01.2016 .
**************************************************************************************

பிரச்சினை....from www.tamil.thehindu.com...

என் குடும்பத்தில் நடந்த உரையாடல்: “தம்பீ...” ---- “என்னவாம்?”
“தம்பி, நேத்திக்கு நான் பேச வந்தப்ப, இன்னிக்குக் காலைல ஃப்ரீயா இருப்பேன்னீங்க...அதான்,பேச வந்தேன்...” ---- “சொல்லுங்க...”
“ எட்டு மாசம் ஆச்சு...” ---- “அதுக்கு என்னவாம்?”

இதில் பணிவான குரலுக்குச் சொந்தக்காரர் என் தாத்தா. அவர் வாடகை கேட்கும் பாணி இது. பணப் பிரச்சினை காரணமாக பாதி வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உகந்த நல்ல பையன் ஒருவன் அளித்த அட்வான்ஸால் தற்காலிகமாகப் பணப் பிரச்னை தீர்ந்தது.

அப்புறம்தான் தெரிந்தது ஏற்கெனவே அவன் குடியிருந்த வீட்டைக் காலிசெய்த அன்று அந்த வீட்டார் ஆடு வெட்டி நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பது. தாத்தாவுக்கு அவனை எப்படி வீட்டைக் காலிசெய்ய வைப்பது என்ற பிரச்சினை தொடங்கியது.

எல்லோருக்கும் இப்படி ஏதாவது நேர்கிறது. வேலை இல்லாதவருக்கு வேலை கிடைத்தபோது, மகளுக்கோ-மகனுக்கோ திருமணம் ஆனபோது, கஷ்டப்பட்டு ஒரு வீட்டைக் கட்டியபோது... அத்துடன் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறோம். விரைவிலேயே உங்கள் சந்தோஷம் துக்கமாக மாறுகிறது.

ஏன் ? வேலையில் கசப்பு அடைகிறோம்; செல்லமாய் வளர்த்த மகள் கல்யாண உறவில் ஏமாற்றம் அடையும்போது வருந்துகிறோம்; கட்டிய வீட்டில் கடன் புகும்போது கலங்குகிறோம்.
ஆனால், நாம் பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதாக அவசரப்பட்டு நினைத்துக்கொள்கிறோம். பிற்பாடு அந்தப் பிரச்சினை வேறு வடிவத்தில் நம்மிடம் கை குலுக்கும்போது அதிர்ச்சி அடைகிறோம்.

நியாயப்படி நீங்கள் எதை பிரச்சினை என்று நினைத்தீர்களோ, அந்தப் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு கண்டுவிட்டீர்கள் எனக் கருதினால் அதன்பிறகு அந்தப் பிரச்சினையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கவே கூடாது.

பின் என்னதான் நடக்கிறது? நாம் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. இடம் மாற்றி வைக்கிறோம்; ஒளித்து வைக்கிறோம்; அதன் வடிவத்தை மாற்றி வைக்கிறோம்.

வேலையின்மை என்னும் பிரச்சினைதான் வேலையில் கசப்பாக மாறி இருக்கிறது. உங்கள் பெண்ணின் எதிர்காலம் பற்றிய பொறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றிவிட்டீர்கள். அந்தக் கணக்கின் தலைப்பு (Head of account) தான் மாறி உள்ளதே தவிர, மகள் மீதான உங்கள் அக்கறை இல்லாமல் போய்விடவில்லை. அது அந்த அக்கவுண்ட் ஷீட்டிலேயேதான் வேறு இடத்தில் உள்ளது. சொந்த வீடு இல்லை என்ற பிரச்சினைதான் புதிய வீட்டில் கடன் சுமையாக புகுந்துள்ளது.

இவை மட்டுமல்ல உலகில் எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். ஒரு பிரச்சினையை நீங்கள் எடுத்துக் கொண்டு அதைப் பகுத்துக் கொண்டே போனீர்கள் என்றால் அதன் மாறு வேடங்களை உணர்வீர்கள். எந்தப் பிரச்சினைக்குமே நிரந்தரத் தீர்வு சாத்தியமே இல்லை.

அப்படியானால் பிரச்சினைகள் தீராதா? கண்டிப்பாகத் தீராது.அதை ஒழித்துவிட்டதாய் நினைக்கவே நினைக்காதீர்கள்.பிரச்சினைகளின்போது நாம் செய்வதெல்லாம் பிரச்சினைகளுக்கு வேறு ஒப்பனைகள் போடும் வேலைதான். அதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்த ‘மாதிரி’ உணர்வைப் பெறத்தான் இவ்வளவு முயற்சிகளும் பாடுகளும்.

இது புரியாமல் அவசரப்பட்டு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைப்பதால்தான் பின்னால் புலம்புகிறோம். சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல அது வேறு விதத்தில் முளைத்து நிற்பதை ஏற்க முடியாமல் இன்னும் டென்ஷன் ஆகிறோம்.

பிரச்சினைகள் ஏற்படுவது என்பது நமக்குப் பசிப்பது போல. ஒருவேளை உணவு சாப்பிட்டால் போதும். ஆயுளுக்கும் பசிக்காது என்று யாரும் நினைப்பதில்லை. பிரச்சினைகளை மட்டும் ஏன் இனி வராது என்று நினைக்க வேண்டும்? பிற்பாடு அது வரும் போது ஏன் துவள வேண்டும்?
நியூட்டன் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லியிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார். “பிரச்சினைகளை ஆக்கவும் அழிக்கவும் முடியாது. ஆனால் பிரச்சினைகளை மற்றொரு வகைப் பிரச்சினைகளாக மாற்றி வைக்க முடியும். இதுவே பிரச்சினை அழிவின்மை விதி ..”

அலுவலகத் தோழி சொல்லுவாள். “இருபது ஃபைல்களை வச்சுக்கிட்டு வேலையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்...” உண்மையில் அதே போல்தான் எல்லோரும் மொத்தமே நான்கைந்து பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

மசாலா தோசை, மைசூர் மசால், ஸ்பெஷல் மசால், ஆனியன், நெய் தோசை, மட்டன் தோசை என ஒரே மாவு மாறுவது போல், ஒரே பிரச்சினைதான் ‘ஒன்றே என்னின் ஒன்றே யாம், பல என்று உரைக்கின் பலவே யாம்’ என்று மாறுகிறது. அதை உணராது நாம் பிரச்சினைகளால் சூழப்பட்டிருப்பதுபோல் மயக்கம் கொள்கிறோம்.

பிரச்சினைகள் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது புதிய சட்டைகளை அணிந்து வருகிறது.
இங்கிலாந்தில் “மன்னர் இறந்து விட்டார்; மன்னர் வாழ்க” என்பார்கள். இறந்தவர் எப்படி வாழ முடியும் என்று குழம்ப வேண்டாம். ஒரு மன்னர் இறந்தவுடன் அடுத்த மன்னர் பதவிக்கு உடனடியாக வந்துவிடுவார். இதைக் குறிக்க “ஹென்றிகளும், ஜார்ஜ்களும் வருவார்கள் போவார்கள்...மணிமகுடம் மட்டும் என்றும் நிலைத்திருக்கும்” என்று சொல்வது பிரச்சினைகளுக்கும் பொருந்தும்.

பிரச்சினை முடிந்துவிட்டது; பிரச்சினை தயாராக இருக்கிறது!
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

Wednesday, October 28, 2015

from tamil.thehindu.com

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு ஒரு அம்மணி மைக்கோட அதிரடியா வர்றத டி.வி.யில பார்த்திருப்பீங்க. அதேமாதிரி, ‘உங்க சாப்பாட்டுல பீப் இருக்கா?’ன்னு கேட்டு ஒரு கும்பல் வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுமோன்னு பயமா இருக்கு, நாட்டு நடப்பைப் பார்க்கும்போது.

அதுக்கு முன்னாடி, நம்ம வீட்ல யார் யார் என்னென்ன சாப்பிடுவாங்கன்னு கொஞ்சம் யோசிங்க. ஒருத்தருக்கு கத்தரிக்கா பிடிக்காது. இன்னொருத்தருக்கு பாகற்காயைப் பார்த்தாலே குமட்டும். சில பேரு உப்புமான்னு சொன்னாலே உதைக்க வந்துடுவாங்க.

எங்க வீட்ட எடுத்துக்கிட்டா, சுப்பையா தாத்தா சைவம். தேனம்ம பாட்டிக்குக் கருவாடுன்னா உசிரு. அப்பா வுக்குக் கருவாடும் நாட்டுக்கோழியும்தான் ரொம்பப் பிடிக்கும். மீனை வெச்சா எந்திரிச்சி ஓடிடுவாரு.

அம்மாவுக்கு அயிரை மீனும் ஆட்டுக்கறியும்தான் இஷ்டம். கோழிக்கறிய தொட்டுற மாட்டாவ. கேட்டா, “ச்சேய்! அது எதையெல்லாம் திங்குது தெரியுமால? பன்னிக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?”ன்னு திருப்பிக் கேப்பாவ.

பெரியக்காவுக்கும் கோழி ஆகாது. சின்னக்காவுக்கு பிராய்லர் கோழியும் ஆட்டெலும்பும் உசிரு. என் மனைவியோட சாப்பாட்டப் பத்தி சபையில சொல்றது எனக்கு நானே வெச்சுக்கிற ஆப்பு. எனக்குக் கருவாடு ஆகாது. ஆனா, சின்ன வயசுல பசங்களோட சேர்ந்து எலிக் கறி தின்னிருக்கேன். என்னையும் எங்க அண்ணனையும் அனைத்துண்ணின்னு சொல்லலாம். எங்க சாப்பாட்டுல்ல ‘பீப்’ இருக்கு. என் மவன் நண்டு திங்கிற அழகே அழகு. “பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத் துண்டம் எனக்கு”ன்னு கேட்டுத் திங்கற பய.

விஷயத்துக்கு வருவோம்… ஒரு குடும்பத்துக்குள்ளயே சாப்பாட்டு விஷயத்துல இத்தனை முரண்பாடு இருக்கும்போது, நாட்டுல இருக்காதா? அப்புறம் ஏன் புரட்சி போராட்டம்னு ‘சீப்பாய்’ கலகம் பண்றீங்க?

நன்றிப் பெருக்கும் எச்சிப் பெருக்கும்
ஆஹா, இவன் ‘மாட்டுக்கறி விருந்து’ல கலந்துக்கிற ஆளுபோலன்னு சட்டுன்னு முடிவுக்கு வந்திறாதீங்க. பத்து வருஷமா மாடும் மாடு சார்ந்த இடத்துலேயும் வாழ்ந்தவன் நான். என் கண்ணு முன்னாடி நடந்த பசு பிரசவத்துல பொறந்த பயதான் சின்னக்கண்ணன். சேட்டைக்காரனா இருந்தாலும், எம்மேல அவனுக்குத் தனிப் பாசம். எனக்கும்தாம். பள்ளிக்கோடம் விட்டு வரும்போதே, ஒரு குத்து பசும்புல் கொண்டாந்து அவனுக்கு வூட்டுன பிறகுதான் விளையாடவே போவேன்.

கொஞ்சம் வளந்ததும் அவனையும் மேச்சலுக்கு அனுப்புனாவ பெரியம்ம. மாடுகள மேயவுட்டுட்டு, கருவமர நெழல்ல உக்காந்து சாணி வண்டு, குழிநரிப் பூச்சியோட வெளையாண்டுக்கிட்டு இருந்தேன். சின்னக்கண்ணன் ஒரு மாதிரி கத்துனான். அழுவுற மாதிரி இருந்துச்சி. பதறிப் பக்கத்துல போனா, தலைய ஒரு மாதிரி சிலுப்பிக்கிட்டு, வலது காலத் தூக்கித் தூக்கிக் காட்டுனான். பூச்சி எதுவும் கடிச்சிருக்குமோன்னு பயம். கவனிச்சிப் பார்த்தப்பதான் தெரிஞ்சுது, அவனோட கால்ல பெரிய நீர்க்கருவ முள்ளு குத்தியிருக்குதுன்னு. அத எடுத்துவுட்டதும், அவன் மூஞ்சியில சந்தோஷத்தப் பாக்கணுமே. என்னைய நக்கி எடுத்து, நன்றிப் பெருக்க எச்சிப் பெருக்கா ஆக்கிட்டான்.

அடுத்த பத்தாவது வருஷம், ராமநாதபுரத்துல ஒரு ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன். காலையில 9 மணியில இருந்து ராத்திரி 11 மணி வரைக்கும் வேலை. ராத்திரியும் அங்கேயே தங்கிறணும். வார லீவும் கெடையாது. சம்பளம் வெறும் 1,500 ரூபா. செகண்ட் ஷோ சினிமா, வாரப் புத்தகம் படிக்கிறதுதாம் ஒரே பொழுதுபோக்கு. மிச்சக் காச வெச்சி மாசத்துக்கு 90 தடவ ஓட்டல்ல சாப்பிடணும். பிளாட்ஃபாரக் கடையில சாப்பிட்டாலும், வயித்துக்கும், பர்சுக்கும் பற்றாக்குறை வந்திடும்.

மறக்க முடியாத பிஸ்மி
காலையில இட்லி. மத்தியானம் லெமன் சாதம், தயிர் சாதம். ராத்திரி மறுபடியும் இட்லி, தோச. இருவத்தோரு வயசுப் பய இப்படி அரைப் பட்டினி கெடந்தா எப்படியிருக்கும்? புரோட்டோ திங்க நாக்கு துடியா துடிக்கும். கடைக்குப் போனா, அப்படியே ‘சிக்கன் 65’ திங்க ஆசை ஆசையா வரும். காசு இருக்காது. அப்பதான் பிஸ்மி கடையைக் கண்டுபிடிச் சேன். 20 ரூபாய்க்கு ‘பீப் 65’ தருவாங்க. சும்மா பஞ்சு மாதிரி இருக்கும். என் பசிப்பிணி போக்கிய பிஸ்மி கடையைச் சாகும் வரை என்னால மறக்க முடியாது.

என் நண்பன் ஒருத்தன், “ஒரு இந்து மாட்டுக் கறி சாப்பிடலாமாடா, அதுவும் கன்னுக்குட்டிக் கறிய?”ன்னு திட்டினான். அவன் பேசுன பேச்சுல எனக்குக் குற்ற உணர்ச்சி வந்திடுச்சி. என்னம்மோ, சின்னக்கண்ணன நானே கொன்னு தின்னுட்டது மாதிரி ஃபீல் பண்ண வெச்சிட்டான்.

அறிவுரை சொல்றவன் ஒருபோதும் நம் பசியை ஆத்தப்போறது இல்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் பீப் சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் அன்னைக்குத்தான் விளங்குச்சி.

வீட்ல ஆடு, மாடு வளர்க்கிறவங்க அதை மத்தவங்க சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது இல்ல. அதேமாதிரி சாப்பிடுறவங்களும் இது இந்துக்களோட புனித விலங்கு; அதனால அதக் கொன்னு திம்போம்னு சிந்திக்கிறதில்ல. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டே, சச்சரவு பண்றது எதற்காக? அதுதான் இந்துத்துவா அரசியல்!

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பு களுக்கு கிராமத்தான்கள் சொல்வது ஒண்ணுதான். உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம்னு நீங்க சொல்றது உண்மைன்னா, அது இத்தன நூற்றாண்டா தாக்குப்பிடிச்சி நிக்கிறதுக்குக் காரணம், அதில் இருக்கிற சகிப்புத்தன்மைதான். இந்துத்துவாங்கிற பேர்ல அதைக் கெடுத்துறாதீங்க.

அரசியல் பண்ணத்தான் செய்வோம்னா, அதுக்கு ஒரு யோசனை சொல்றேன். கடந்த 13 வருஷத்துல நான் எரநூத்திச் சொச்சம் அசைவ ஓட்டல்ல சாப்பிட்டுருக்கேன். எங்கு மட்டன் சாப்பிட்டாலும், ‘இதெல்லாம் மட்டன்தானா? இல்ல மாடா?’ங்கிற சந்தேகம் தொடருது. குடும்பத்தோட சாப்பிடப்போற எல்லா இந்துக்களுக்கும் இதே சந்தேகம் வரும்னு நினைக்கிறேன். அதனால, உங்க ‘அரை டவுசர்களைப்’ பூராம் இந்த மாதிரி ஓட்டல்களுக்குக் கங்காணியா போட்டு நம்ம கலாச்சாரத்தைக் காப்பாத்துங்க. அதே மாதிரி டாஸ்மாக் பார் சைடிஷ்களையும் மேற்பார்வையிடுங்க.

நாட்டுல மொத்தம் எத்தனை பிஜேபி, ஆர்எஸ்எஸ்காரங்க இருக்காங்களோ அத்தனை பேரும் இந்த மாதிரி ‘பொதுச் சேவை’க்குப் போயிட்டிங்கன்னா, வீட்ல அவனெவனுக்கு என்ன பிடிச்சிருக்கோ அத நிம்மதியா சாப்பிடலாம் பாருங்க.

அப்புறம் கேரளாவுக்குக் கொஞ்சம் சிறப்புக் கவனம் செலுத்துங்க. ஏன்னா, ‘மாட்டுக் கறி சாப்பிடுறத நாங்க எதிர்க்க முடியாது’ன்னு கேரள பாஜக தலைவரே சொல்லிட்டாரு. அதை முறியடிக்கதுக்கும் ஒரு ஐடியா சொல்லுதேன் கேட்டுக்கோங்க.

காளை வன விலங்கு… பசு?
போன ஆட்சியில மத்திய காட்டிலாகா அமைச்சரா இருந்த ஜெய்ராம் ரமேசு, சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகளைக் காட்சிப்படுத்தவோ, வித்தை காட்டவோ கூடாதுன்னு ஏற்கெனவே இருக்கிற சட்டத்துல, 2011ல ஒரு திருத்தம் பண்ணுனாரு ஞாவகம் இருக்குதா? அந்தப் பட்டியல்ல காளை மாட்டையும் சேர்த்துட்டாரு. காளை வன விலங்காம் (ஆனா, யானையைச் சேர்க்கலை).

காளை வன விலங்குன்னா, அதோட துணைவியார் பசுவும் வன விலங்குதான? அதனால, மாட்ட வெட்டுத வனையும், மாட்டுக் கறியச் சாப்புடுதவனையும் புடிச்சி வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்துல 7 வருஷம் உள்ள போடுங்க. மாட்டுக் கறி விற்கத் தடைன்னு சட்டம் போடாமலே அத கேரளாவுல அமல்படுத்துன சந்தோஷம் உங்களுக்கு. எங்க ஜல்லிக்கட்டைக் கெடுத்த ஜெய்ராம் ரமேசை மாட்டுக் கறி திங்கவிடாம ஆக்குற சந்தோஷம் எங்களுக்கு. எப்படி டீல்?

திராவிடக் கட்சிகள் ஆட்சியிலேயே ஆடு, மாடு, கோழிய கோயில்கள்ல வெட்ட தடைச் சட்டம் போட முயற்சி பண்ண ‘முற்போக்கான’ மாநிலம்தான் தமிழ்நாடு. ஆளுங்கட்சி உதவியோட தமிழ்நாட்டு லேயும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்திட்டீங்கன்னா போதும். முரண்டுபிடிக்கிற தமிழ்நாடும், கேரளாவும் உங்க கைக்குள்ள வந்துடும். அப்புறம் என்ன, இந்தியாவே உங்க கண்ட்ரோல்தான?

அப்படியே, மாட்டைக் கடிச்சி, ஆட்டைக் கடிச்சி கடைசியில அசைவத்துக்கு எல்லாம் தடை போட்டுருங்க. பருப்பு விலை கிலோ பதினெட்டாயிரம் ரூபா ஆகிரும். அப்புறம் என்ன… 2016 சட்டசபைத் தேர்தல்ல உங்க பருப்பு நல்லாவே வேகும்! வாழ்த்துகள்!
கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

No Exams...?

அஞ்சல் சங்கத்தலைவர்களுக்கு...

 மறந்துவிட்டீர்களா ...?

தேர்வுகள் எப்போது... ?

1. LGO 2015 Examination- [MTS/POSTMAN to PA]


2. Residual 2013-[ Left out LGO 2013 vacancies-GDS to PA]

3. Residual 2014-[ Left out LGO 2014 vacancies-GDS to PA]

4. Postmaster Grade 2015.

[இந்த தேர்வுகள் நடந்தால்தானே PA Cadre -ஆட்பற்றாக்குறை குறையும் ...]

நன்றி ...

Thursday, October 22, 2015

from www.tamil.thehindu.com...

அஞ்சாப்பு படிச்சப்ப, திடீர்னு ரஜினி, ராமராஜன் ரசிகர்களுக்குள்ள சண்ட வந்திருச்சி. அவங்க ரஜினியை ‘காக்கா வலிப்பு’னு சொல்ல, நாங்க ராமராஜனை ‘டவுசர்’னு ஏச பிரச்சன பெருசாயிட்டு. உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் முடிஞ்ச நேரம்போல, ‘யாரு பெரியாளுன்னு ஓட்டுப்போட்டுப் பாத்திருவோமால’ன்னு ஒருத்தன் சவால் வுட்டான். ‘இன்னைக்கு சாயங்காலம் ஒண்ணுக்கு மணி அடிச்சதும் எலெக் ஷன்டா’ ன்னு நாங்களும் பதில் சவால் வுட்டோம்.

காம்பஸ் டப்பா தான் ஓட்டுப் பொட்டி, குச்சி தான் ஓட்டு. ஒரு டப்பாவுல முருங்கப்பசையை வெச்சி ரஜினி படத்தை ஒட்டுனோம். இன்னொரு டப்பாவுல சோத்துப்பசைய வெச்சி ராமராஜன் படத்தை ஒட்டுனாம் இலங்காமணி. வாக்குப்பதிவு தொடங்குச்சி. ஊரான் டப்பாவுல குச்சியை எவன்தான் போடுவான்? ஓட்டுப்பூத்து வெறிச்சோடிப்போச்சு.

எங்கப்பாவும் கடைக்காரரு, இலங்காமணியோட தாத்தாவும் கடைக்காரரு. ரெண்டு பேரும் குச்சிகள ஓசியா குடுத்து வகுப்பு பயல்வலப் பூராம் ஓட்டுப் போட வெச்சோம். “அவன் நாலு குச்சிதான் குடுத்திருக்கான். நாம மொத்தம் ஆறு குச்சி குடுத்திருக்கோம். கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்”னு வீரன்மாடசாமி எங்காதுக்குள்ள ஓதுனான். நம்பிக்கையோட, ஓட்ட எண்ண ஆரம்பிச்சோம். ரஜினிக்கு 24 ஓட்டு விழுந்திருந்திச்சி. மொத்த ஓட்டே முப்பத்தாறுதாம். ஜெயிச்ச சந்தோஷத்துல, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் கொழந்தையும் சொல்லும்’னு பாட்டுப்படிச்சி முடிய கோதிவிட்டோம். 

“செத்தநேரம் சும்மா இருங்கலே, ராமராஜனுக்கு 32 ஓட்டு விழுந்திருக்கு”ன்னு அவனுவ சொன்னானுவ. ஏமாத்துறானுவளோன்னு மறு எண்ணிக்கை வெச்சோம். எப்பிடிப்பாத்தாலும் 32 ஓட்டு வந்துருச்சி. பொறவுதான் உண்மை தெரிஞ்சுது. நாங்க ஒரு குச்சிய நாலுநாலா உடைச்சி ஓட்டுப் போட்டா, அந்தப் பக்கிக எட்டெட்டா உடைச்சிப் போட்டுருக்கானுவ. பூரா குச்சும் எலிப்புழுக்கை தண்டித்தான் இருந்துச்சி. பொறவென்ன, ரஜினியையே தோக்கவெச்சி, ராமராஜன் செயிச்சிட்டாரு.

நடிகர் சங்கத் தேர்தல்ல சரத்குமாரு அணி முன்னிலைங்கிற செய்தியைக் கேட்டதும், எனக்கு அந்தப் பள்ளிக்கோடத்து தேர்தல் ஞாவகம் வந்துருச்சி. ரெண்டு தேர்தலுக்கும் ஆறு வித்தியாசம்தாம். எங்க பள்ளிக்கோடத்துல ஐடி கார்டு கெடையாது. சரத்குமார், ராதாரவி, நாசர் எல்லாம் ஸ்கூல் பசங்க மாரி ஐடி கார்டு போட்டுருந்தாங்க. தேர்தலப்ப நாங்க ஒண்ணு ரெண்டு கெட்டவார்த்தைய அர்த்தம் தெரியாமப் பேசிக்கிட் டோம், இவங்க வெவரம் தெரிஞ்சே சாதியைச் சொல்லி சண்டை போட்டுக்கிட்டாங்க. எங்க தேர்தல்ல பக்கத்து கிளாஸ் பையங்கள எல்லாம் ஓட்டுப்போட விடலை. இங்க கே.எஸ்.ரவிக்குமார், கங்கை அமரன் எல்லாம் ஓட்டுப்போடுறாங்க (அவங்களும் நடிகர்களாம்!) நாங்க யாரையும் தடுக்கல, இங்க, சரத்குமார் செட்டு நடிகரான மன்சூர் அலிகானையே ஓட்டுப்போடவிடல. நாங்க யாரும் அழல, யாரையும் தள்ளியும்விடல. இங்க அதுவும் நடந்துச்சி.

இன்னொரு முக்கியமான விஷயம் ர, ரா தேர்தலைப் பத்தி எங்க வாத்தியாருக்கே தெரியாது. இவங்க தேர்தல் ஆரம்பிச்சதுல இருந்து முடியிற வரைக்கும் நாலு டிவியில லைவ் பண்ணுனாங்க. இந்த விஷயத்துல நடிகர்கள குறை சொல்லுததா, டிவிகாரங்கள குறை சொல்லுததான்னு ஒண்ணும் புரியல. நல்ல வேள என் எதிர்பார்ப்புக்கு மாறா, சரத்குமாரு தோத்துட்டாரு. இல்லன்னா விருதுநகர்ல பிரம்மாண்டமான காமராஜர் மணிமண்டபமும், சென்னையில சிவாஜி மணிமண்டபமும், வானுயர்ந்த நடிகர் சங்கக் கட்டடமும் கட்டுன மாரி, சீனியர் உறுப்பினர்களுக்காக ஆயிரம் சதுரடியில இலவச வீடு கட்டிக் குடுக்கும் பணிக்கு தன்னையே அர்ப்பணிச்சிருப்பாரு. ஏற்கெனவே சமத்துவ மக்கள் கட்சியைத் தனியாளா நடத்தி வார அவருக்கு கூடக்கொஞ்சம் கஷ்டத்தக் குடுத்திறக்கூடாதுன்னுதாம், மிச்ச நடிகர்க எல்லாம் நாசருக்கு ஓட்டுப்போட்டிருக்காங்கபோல.

இதுக்கு நடுவுல, சங்கத்துப் பேர தமிழ்நாடு நடிகர் சங்கம்னு மாத்தணும்னு பாரதிராஜா சொன்ன கருத்த தன்னோட கருத்து மாரியே ரஜினியும் சொல்லிட்டாரு. அவர் என்ன சொன்னாலும் எதுத்துப் பேசுற கமலு, இந்திய நடிகர் சங்கம்னு புதுக்குண்டை போட (நல்ல வேள, உலகநாயகன் சங்கம்னு சொல்லல) ‘ரெண்டும் வேணாம். நடிகர் சங்கம்னு பேரு வைங்கப்பா போதும்’னு தலைவன் கவுண்டமணி தீர்ப்புச் சொல்லும்படியா ஆயிடுச்சி.

ஓட்டுப்போட வந்த எல்லாத்தையும் மாரி நினைச்சிக்கிட்டு விஜயகாந்த்கிட்ட நிருபர் ஒருத்தர் கேட்டாரு, ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எப்படியிருந்துச்சி?’ன்னு. ‘தமிழ்நாட்டுல எனக்கே பாதுகாப்பில்ல. மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, அதைவிட்டுட்டு நடிகர்களுக்குப் பாதுகாப்பு இருக்கான்னு கேட்கீங்களே? அய்யோ அய்யோ’ன்னு போய்ட்டாரு. இந்த விஷயத்துல, நாம ஹீரோன்னு கொண்டாடுத ஆளுங்க காமெடியனாவும், காமெடியன்னு சொல்லுத ஆளுக ஹீரோவாவும் இருக்காங்க பாருங்க. நடிகர் சங்கத் தேர்தல் முடிவு வந்திருச்சி... இனிமே பருப்பு விலை கொறைஞ்சிரும்னு நாம கிண்டல் பண்ணிட்டு இருக்கோம். நடிகர் தேர்தல் என்னதான் காமெடியா இருந்தாலும், ‘இனிமே வாக்குறுதிய நிறைவேத்த முடியலன்னா ராஜிநாமா பண்ணிறணும்’னு சில குரல்க பளிச்சுன்னு கேட்டுச்சே கவனிச்சீங்களா? நாம அப்படிக் கேக்க முடியுமா? முதல்ல நம்மாளுக என்னென்ன வாக்குறுதி குடுத்தாங்கன்னு ஞாவகமாவது இருக்கா?

உதாரணத்துக்கு 2011 அதிமுக தேர்தல் அறிக்கை ஞாபகம் இருக்கா? தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூவா கடனாளி மாநிலங்கிற தலைக்குனிவுல இருந்து மீட்போம்னாங்க, மின் உற்பத்தியைக் கூட்டுவோம்னாங்க, போக்குவரத்துத் துறைய நவீனமயமாக்குவோம், விமானக் கருவிகள் தயாரிப்பு மற்றும் பழுது பார்க்கும் தொழிற்சாலையுடன் கூடிய ஏரோ பார்க் தென் தமிழகத்தில் அமைக்கப்படும்னாங்க, சென்னைய தவுத்து தமிழ்நாட்டோட தெக்கு, கிழக்கு மேக்கு பகுதியிலேயும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்னாங்க, சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மோனோ ரெயில் விடப்படும்னாங்க, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள செறப்பா செயல்படுத்துவோம்னாங்க, குறைஞ்ச கட்டணத்துல அரசு கேபிள் இணைப்புன்னாங்க, தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகவும், இந்திய ஆட்சி மொழியாகவும் ஆக்கி, தமிழில் படிச்சவங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவோம்னாங்க, வறுமைக் கோட்டுக்குக் கீழ உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் தருவோம்னாங்க, இன்னும் எவ்வளவோ கெடக்கு. சொன்னதுல நடந்தது என்னன்னா, விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், ஆடு, மாடுதான் கரெக்ட்ரா வீடு வந்து சேந்திருக்கு. மிச்சமெல்லாம் என்னாச்சு? ஞாபகம் இருக்கா? அவங்களும் மறந்துட்டாங்க, நாமளும் மறந்துட்டோம்!

நாம, வெறும் மூவாயிரத்துச் சொச்சம் ஓடடுள்ள நடிகர் சங்கத்தை ஏமாத்துனவங்கள கலாய்க்கோம். முழுசா மூணரைக்கோடி ஓட்டப் போட்டுட்டு பேந்தப் பேந்த முழிக்கோம். நடிகர்களப் பத்தி சிந்திச்சது போதும், அடுத்து நம்ம தேர்தல் வரப்போகுது மக்களே, கொஞ்சம் அதப்பத்தியும் யோசிங்க. இதைவிட பெரிய வாக்குறுதிப் பட்டியலோட ஸ்டாலினும், அன்புமணியும் வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள நிப்பாட்டி ரஜினி மாரி கேள்வி கேளுங்க - உங்க வாக்குறுதிகள குறிச்ச காலத்துல செய்ய முடியலைன்னா ராஜிநாமா பண்ணிடுவீங்களான்னு. அப்படியாது மாற்றம், விடியல் வருதான்னு பாக்கலாம்!
- கே.கே.மகேஷ்,

Wednesday, October 21, 2015

Bonus raised from next year...

The Cabinet decided to double the wage ceiling for calculating bonus to Rs 7,000 per month for factory workers and establishments with 20 or more workers.

"The Payment of Bonus (Amendment) Bill, 2015 to enhance the monthly bonus calculation ceiling to Rs 7,000 per month from existing Rs 3,500 was approved by Union Cabinet here," a source said after the Cabinet meeting.

The amendment bill will be made effective from April 1, 2015. (this means, increased bonus will be paid from 2016 onwards)


Tuesday, October 13, 2015

Congrats...

Smt. S. Kanimozhi, 
IP, Namakkal West Sub Division, 
Namakkal 637001
has been allotted to Western region and posted as 
ASP(HQs), 
Namakkal Division, 
Namakkal  637001
-on promotion.

Likely to join on 23.10.2015.

Wednesday, October 7, 2015

Bonus orders released...


Bonus orders released... 

Postal: 60 days...

Railways: 78 days...

(உச்ச வரம்பு ...?
அதே 3500/-. உயர்த்தப்படவில்லை.
வாழ்க ... நமது சங்கங்கள் ...)

Friday, October 2, 2015

Strike deferred...



National JCA has deferred the proposed Indefinite strike from 23.11.2015.

Strike may be held during February 2016 to April 2016.

Exact date will be announced later.

Reason for postponing the strike: 
           Delay in submission of Pay commission report.

[Postal unions have already declared that the Indefinite strike  in Postal Department will start on 23.11.2015, even if Unions of other Departments like Income Tax, Railway etc decide to defer it.]

Friday, September 25, 2015

from www.tamil.thehindu.com

இந்த கிரானைட் விவகாரம் நான் சின்னப்பயலா இருக்கும்போது ஆரம்பிச்சுது. இப்ப என் பயலே ‘டி.வி. நியூஸ்’ பாக்குற அளவுக்கு வளந்துட்டான். விவகாரம் முடிஞ்சபாடில்ல.
‘ஏலேய், கிரானைட்டுங்கிறது ரொம்ப உசத்தியான கல்லுடா. அது மட்டும் கிடைச்சா ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகிடலாம்’னு ‘படையப்பா' மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். மதுரைக்கு வந்த பிறகுதான் கிரானைட்டோட இன்னொரு மொகரக்கட்டையைப் பாத்தேன்.
‘குவாரிகள்ல வைக்கிற வெடியில, வீடெல்லாம் கீறிப்போச்சு’ன்னு மேலூர் ஜனங்க கலெக்டர் ஆபீஸ்ல புகார் சொல்றதும், ‘அப்படியெல்லாம் இருக்காதே’ன்னு அதிகாரிங்க பதில் சொல்றதும் தினசரி காட்சியா இருந்துச்சி. கொஞ்ச நாள்ல, ‘கோயில், குளத்தையெல்லாம் குவாரியாக்கிட்டாங்க பாவிங்க’, ‘படியளந்த புஞ்சையைப் பறிச்சிட்டாங்க சாமி’ன்னு கூக்குரல்கள் அதிகமாகிட்டே போச்சு. ‘ஆஹா!’ அப்படியான்னு புருவத்தை உயர்த்திக் கேட்டுக்கிட்டாக அதிகாரிக.

போலீஸுக்குப் போனா பிராது கொடுத்தவங்க மேலயே பொய் கேஸ் போட்டாங்க. (பிஆர்பி பழனிச்சாமி ஊர்ப் பேரும் பிராதுக்காரன்பட்டிதான்) போலீஸை நம்பாம நேரடியா கோர்ட்டுக்குப் போனவங்க, அங்க கேஸ் கட்டே காணாமப் போனதும் டரியலாகிட்டாங்க.
இந்தச் சமயத்துலதான் பழனிச்சாமியின் சொந்த மகன் திருமணம் மதுரை குலுங்கக் குலுங்க நடந்துச்சி. நகைக்கடை பொம்மை மாதிரி பொண்ணுக்கு நகை போட்டு, ஃப்ளக்ஸ் வைக்கிற செல்லூர்க்காரய்ங்களே மெரண்டுட்டாய்ங்கன்னா பாத்துக்கோங்க.

‘இனிமே எல்லாம் இப்படித்தான்’னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு முருகேசன்னு ஒருத்தரு மேலூர்ல இருந்து கிளம்புனாரு. ‘2004 மார்ச்ல இருந்து 2008 மார்ச் வரைக்கும் அவங்க தோண்டியெடுத்த கிரானைட் கல்லுக எவ்வளவு?, அதே காலகட்டத்துல அவங்க வெளிநாட்டுக்கு ஏத்துன கல்லுக எம்புட்டு?’ன்னு விவரங்களைத் திரட்டிக்கிட்டு ஐகோர்ட் படியேறினாரு. நல்லவேளையா, அந்த வழக்கு நீதிபதி சந்துருகிட்ட விசாரணைக்குப் போச்சு. “இந்த நாட்டின் குடிமகன் ஒருவன், ஒரு ஏமாற்று வேலையை, மோசடியைக் கண்டுபிடித்து அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவருகிறபோது, அதை மதிப்புமிக்க வரமாக அவர்கள் பாவிக்க வேண்டும். உடனடியாக உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”ன்னு உத்தரவு போட்டாரு.

ஆனா, புகார்ல சொன்னதுபோல எந்த முறைகேடும் நடக்கவே இல்லைன்னு 29.5.10-ல் கலெக்டர் ஆய்வறிக்கை கொடுத்துட்டாரு. அது போதாதா? அய்யா பழனிச்சாமியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு முருகேசன் மேல மானநஷ்ட வழக்கு போட்டுட்டாங்க.

ஒரு தினசரி பத்திரிகையில கிரானைட் ஊழலைப் பத்தித் தொடர் எழுதின குற்றத்துக்காக, ஆசிரியரையும், சிறப்புச் செய்தியாளரையும் அதிகாலை 4 மணிக்கு வீடுபுகுந்து தூக்குச்சி போலீஸ். ‘ஆத்தாடி...’ அப்படின்னு மறுபடியும் எல்லாரும் கப்சிப் ஆயிட்டாங்க.

எப்பவும் காத்து ஒரே பக்கமா அடிக்காது இல்லியா? கிரானைட் மாபியாக்களோட கெட்ட காலம், 2011 மார்ச்ல மதுரை கலெக்டரா சகாயம் வந்துட்டாரு. திருமங்கலம் வித்தைய அண்ணன் அழகிரி, சட்டசபைத் தேர்தல்லயும் காட்டிறக் கூடாதுன்னு தேர்தல் கமிஷன் அனுப்பிவெச்சவருதான் சகாயம். வந்த வேலையைக் கச்சிதமா முடிச்சவரு, கிரானைட் பக்கம் திரும்பிட்டாரு.

மதுரை மாவட்டத்துல 16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை நடந்திருக்குன்னு பெரிய அறிக்கை தயார் பண்ணி அரசுக்கு அனுப்பிட்டு, உத்தரவுக்குக் காத்திருந்தாரு. நாலே நாள்ல ‘உத்தரவு’ வந்துச்சி. ‘உங்களை மதுரையில இருந்து தூக்கி கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநரா போட்டுட்டோம்’னு.

அடுத்து வந்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இன்னும் வேகமானவரு. 18 குழுக்களைப் போட்டு 175 குவாரிகளையும் ஆராய்ஞ்சவரு, 1 லட்சத்து 62 ஆயிரம் கிரானைட் கற்களைப் பறிமுதல் செஞ்சாரு. ஒவ்வொரு கல்லும் பழைய மகேந்திரா வேன் சைஸ்ல இருந்துச்சி. ஒண்ணுக்கு மேல ஒண்ணா கிடந்த இந்த கல்லுகளை எல்லாம் இன்ச் டேப் வெச்சி அளந்து, மதிப்பீடு செஞ்சுட்டு, ‘பறிமுதல் செஞ்ச கற்களோட மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடிக்கு மேல இருக்கும்… ஏலத்தை எப்ப வெச்சுக்கலாம்?’னு மேலிடத்தைக் கேட்க ஆரம்பிச்சாரு. தன் வாழ்க்கையிலயே மோசமான காலகட்டத்தை பழனிச்சாமி சந்திச்சது இப்பதான். அவர் மேல 30-க்கும் அதிகமான வழக்கு பாஞ்சுது. அவரைப் பிடிக்க 7 தனிப்படை தீயா வேலை செஞ்சுது. வேற வழியில்லாம 2012 ஆகஸ்ட்ல எஸ்.பி. ஆபீஸ்ல சரணடைஞ்சார். அவரைத் தூக்கிப் பாளையங்கோட்டை ஜெயில்ல போட்டாங்க. 100 நாளுக்குள்ள அத்தன வழக்குலயும் ஜாமீன் வாங்கிட்டு சிறை மீண்ட சிங்கமாய் வெளியே வந்துட்டாரு.

கிரானைட் ஏலத்தை இணையம் மூலம் உலகளாவிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருந்த அன்சுல் மிஸ்ராவை மதுரையில இருந்தே தூக்கிட்டாங்க. ஒன்றரை வருச உழைப்பை நாலஞ்சு மாசத்துல கொடுத்த அந்த மனுஷனோட மனநிலை எப்படியிருந்திருக்கும்?

போலீஸ்ல சிக்கின ஓட்டை பைக்க மீட்கும் முன்னாடி, ஸ்டேஷனிலேயே அத இத்துப்போக வெச்சிருவாங்க. ஆனா, தொழிலுக்குப் பயன்பட்ட பல கோடி மதிப்புள்ள கிரேன்கள், டிப்பர் லாரிகள எல்லாம் ‘கெட்டிக்காரத்தனமா’ அவங்க மீட்டுட்டாங்க. பழையபடி குவாரி தோண்டுறதுக்கும், கிரானைட்டை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றதுக்கும் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க.

இனிமே அவ்வளவுதான்னு நினைச்ச நேரத்துலதான் ‘சர்வரோக நிவாரணி’ அய்யா டிராஃபிக் ராமசாமி என்டர் ஆனாரு. கிரானைட் முறைகேடு பத்தி விசாரிக்கணும்னு அவர் போட்ட வழக்குதான், சகாயத்தை சட்ட ஆணையராக்கி திரும்பவும் மதுரைக்கு அனுப்புச்சி. ‘மறுபடியும் முதல்ல இருந்தா’ன்னு சொல்லாம… ரொம்ப ஆர்வமா 2014 டிசம்பர் மாசம் குவாரிக்குள்ள நடக்க ஆரம்பிச்சாரு சகாயம். போலீஸ் புறக்கணிச்சாலும்கூட, நரபலி புகாரில் உண்மை இருக்குதான்னு கண்டுபிடிச்சே தீருவேன்னு அடம்பிடிச்சாரு. அவர் சுடுகாட்டிலேயே ராத்தங்கிய பிறகு, வேண்டா வெறுப்பா தோண்டின போலீஸ், 8 எலும்புக்கூட்டை எடுத்திருக்கு.

ஒரு வருசமா திரட்டிய தகவல்களை எல்லாம் அக்டோபர் 15-ம் தேதி கோர்ட்ல அறிக்கையா தாக்கல் செய்யப்போறார் சகாயம். அந்த அறிக்கையை வெச்சு கோர்ட் என்ன உத்தரவு போட்டாலும் அதைச் செய்யுற பொறுப்புல மறுபடியும் அதே அதிகாரிங்கதான் இருக்காங்கன்னு நினைக்கும்போது, எனக்கு தலை கிர்ருன்னு சுத்துது.

கிரானைட் கொள்ளையர்கள் மேல எந்த நடவடிக்கையும் இருக்காதுன்னு சொல்லல. நடவடிக்கை இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்ல வர்றேன். அவங்க தோண்டிப்போட்ட ஆறு, குளம், கால்வாயை எல்லாம் மூடி, விவசாயத்துக்கு ஏத்த மாதிரி செம்மைப்படுத்த எப்படியும் கொஞ்ச காலம் ஆகலாம். அதுக்குள்ள என் பேரனுக்கு நியூஸ் பார்க்கிற வயசு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.

- கே.கே.மகேஷ், 

Thursday, September 24, 2015

Indefinite Strike from 23.11.2015... ??? !!!

(From www.aipeup3tn.blogspot.in)
மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (POSTAL JCA),  ஏற்கனவே மே  மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட  காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல்   நடைபெறும் என  அறிவித்துள்ளது. மத்திய அரசின் பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின்  மெத்தன போக்கு 
காரணமாகவும்  கீழ்க் காணும் முக்கிய கோரிக்கைகள்  இதுவரை நிறை வேற்றப்படவில்லை.   

1. அஞ்சல் துறையில் பணியாற்றும் 2.65 லட்சம் GDS  ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் .

2. கேடர்  சீரமைப்புத் திட்டம்  உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .

3. அனைத்து பகுதிகளிலும் காலிப் பணியிடங்கள் முறையாக முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.

ஏற்கனவே ரயில்வே,  பாதுகாப்பு துறை ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL  JCM  ஊழியர் தரப்பு சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 23.11.2015 முதல் GDS  ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட ஊதியக் குழு  தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது ஊதியக் குழு தன்னுடைய அறிக்கையை  அரசுக்கு  சமர்ப்பிக்க உள்ள சூழலில் இந்த வேலை நிறுத்தம் குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு  NC  JCM  ஊழியர் தரப்பு  தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது  PJCA  வின்  வேலை நிறுத்தம் இதே தேதியில் இருந்து  மேற்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காகநிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது...... 
***************************************************

(இது புத்திசாலித்தனமான முடிவா ...?)


Sunday, September 20, 2015

REPLY OF DEPARTMENT OF POSTS ON DEMANDS OF PJCA




REPLY OF DEPARTMENT OF POSTS ON DEMANDS OF PJCA DHARNA BY ALL INDIA LEADERS TO BE HELD ON 22.09.2015 AT NEW DELHI.

No.08/13/2015-SR 
             Government of India
Ministry of Communications & IT
Department of Posts
                                                                  
                                Dak Bhawan, New Delhi
                               Dated:  17th September, 2015.
 To
The Secretary General,
National Federation of Postal Employees,
1st Floor, North Avenue Post Office Building,
New Delhi-110001

The Secretary General,
Federation of National Postal Organisations,
T-24, Atul Grove Road,
New Delhi-110001.

 Subject: Holding of day long Dharna on 22-09-2015 by Postal Joint Council of   
 Action (PJCA) - Regarding.

Sir,
         
            I am directed to refer to your Circular No.PF-PJCA/2015 dated 12th August, 2015 on the above mentioned subject and to send herewith the following point wise information relating to the Charter of Demands:-


      (i)     Include GDS in 7th CPC for wage revision and other service related matters:-

 Ministry of Finance has not agreed to the proposal of this Department for inclusion of GDS within the purview of 7th CPC inspite of several attempts. 


(ii)    Implement cadre Restructuring proposal in all cadres including Postal Accounts and MMS in Department of Posts:-



Cadre restructuring proposal of Group ‘C’ employees:  The proposal is pending with the Department of Expenditure, M/o Finance at present.



The Cadre Restructuring proposal of Stenographers cadre is under examination.



Postal Accounts Cadre: Regarding restructuring of Sorter, LDC and DEO cadre in PAO’s, views of both the Associations viz. AIPAEA, BPAOEA have been called for vide letter dated 29th June, 2015. It would be processed further on receipt of necessary inputs from them.



MMS Cadre:  The case of MMS is under process.



(iii)    Fill up vacant posts in all cadres of Department of Posts :-



(a)    As regards vacancies of LDC/JA/Stenographers under DR quota the necessary details have been uploaded on the SSC’s Website.  Further action would be taken on receipt of dossiers from the SSC. 



(b)    Abeyance order dated 27-04-2015 issued in r/o PA/SA DR Exam 2014 has been revoked in 10 Circles namely Andhra Pradesh, Assam, J&K, Karnataka, Kerala, North East, Odisha, Tamil Nadu, West Bengal and Punjab and these Circles will now be filling up PA/SA DR 2014 held up vacancies.



(c)   Work of conduct of PA/SA DR Exam for the vacancies of 2015-16 has been entrusted to the SSC and in its notification dated 13-06-2015, 3506 vacancies have been announced to be filled up.            Examination is scheduled in the month of November, 2015.



(d)  The necessary instructions have been issued to fill up the vacancies in Postman/Mailguard and MTS cadre and circles are in the process of filling up these vacancies.



(e)    Instructions already exist for filling up of vacant posts of GDS Mail Man.



2.       In view of the fact that all the issues are under active consideration and being processed, the Federations are advised to cancel the Dharna as no useful purpose is served through agitations/dharnas.


Yours faithfully,

     -sd-
( Arun Malik )
Director (SR & Legal)

Saturday, September 19, 2015

Induction training to LGO candidates...


Induction training will be held  

for LGO candidates

from 05.10.2015 to 16.12.2015 

at PTC, Madurai.

Wednesday, September 16, 2015

LGO 2014 Results....

Congrats....for passing LGO 2014 exam...

 1.  Smt.P. Poongothai, Postwoman, Tiruchengodu HO 
Gen 107587  Marks= 62+ 80= 142    UR

 2. Shri.  M. Seralathan, Mail overseer, Namakkal East Sub dn. 
 Gen 107582    Marks= 44 + 56 = 100   UR ...

Welcome to P3....


Wednesday, September 9, 2015

Postman Examination 2015.. for outsiders

ONLINE APPLICATIONS INVITED  FOR THE POST OF POSTMAN/MAILGUARD
FOR DETAILS






LAST DATE FOR REGISTRATION:04/10/2015

LAST DATE FOR PAYMENT:07/10/2015

DA 6% announced...

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீத உயர்வுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

(courtesy: www.tamil.thehindu.com)