Wednesday, January 28, 2015

கடிதங்கள் எழுதச் சொல்லுங்கள்...

....அன்புள்ள.. என்று துவங்கி, இப்படிக்கு என்று முடிக்கும் ஏராளமான கடிதங்களை அன்றைய நாட்களில் பலரும் எழுதியிருப்பார்கள். இதைப் படிக்கும் சிலரும் கூட கடிதங்கள் வாயிலாக எத்தனையோ தகவல்களை பரிமாறிக் கொண்டிருப்போம்.
விடுமுறை நாட்களில் நண்பர்களுக்கும், முக்கியச் செய்திகளை கடிதங்கள் வாயிலாக உறவினர்களுக்கும் தெரிவித்திருப்போம். அவர்களது பதில் கடிதங்களுக்காக காத்திருப்போம். தபால்காரர் நம் வீட்டு வாசலில் வந்து பெயர் சொல்லி பெல் அடிக்கும் போது ஓடிச் சென்று தபாலை வாங்கிப் படிக்கும் சுகமே அலாதி.  
இதுபோல, முக்கியப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம்ஆனால், தற்போது மின்னஞ்சல், செல்போன், குறுந்தகவல்கள் என வேகமான தகவல் பரிமாற்றத்தின் விளைவாக கடிதங்கள் பலவந்தமாக விடைபெற்றுக் கொண்டன.

இந்த கடிதங்கள் மாணாக்கருக்கு எத்தனை விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. கடிதம் எழுதும் முறை, ஒரு ஆசான் போல் பல்வேறு விஷயங்களை பிள்ளைகளுக்கு தானாகவே ஏற்படுத்தின. கடிதத்தைத் துவக்கும் முறை, முதலில் நலம் விசாரிப்பு, பிறகு நலம் தெரிவிப்பு, தகவல், மகிழ்ச்சியான விஷயத்தை முதலில் கூறுவது, பிறகு மெல்ல துன்பச் செய்தியை சொல்வது, பிறகு இயல்பாகப் பேசி கடிதத்தை முடித்து விடை பெறுவது, பதில் அனுப்ப வலியுறுத்துவது, ஊருக்கு அழைப்பது, உற்றார் உறவினர்களின் நலம் விசாரிப்பது என ஒரு கடிதத்தில் எத்தனை முறைகளை வைத்திருந்தோம்.
ஆனால், அனைத்தையும் இழந்து விட்டு மொட்டைப் பனமாரமாய் அல்லவா இருக்கிறது இப்போதைய தகவல் தொடர்புகள்எப்படி இருக்கிறாய் என்பதை கூட மின்னஞ்சல்களிலும், குறுந்தகவல்களிலும் h r u என்று சுருக்கிவிட்டோம். இது நம் மனதும் சுருங்கிவிட்டதாகவே எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த கடிதம் எனும் தகவல் தொடர்பை நம் பிள்ளைகள் பின்பற்ற வழி ஏற்படுத்துங்கள். நெருங்கிய உறவுகளுக்கு கடிதங்கள் எழுதி அதனை அஞ்சல் செய்யுங்கள். சிறிய வயதுள்ள பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு கடிதம் எழுதி அவர்களையும் பதில் கடிதம் எழுதச் சொல்லுங்கள்.
அஞ்சலில் எல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்பவர்கள், சிறார்களை, அவர்களது தாத்தா பாட்டிகளுக்கு கடிதம் எழுதி நேரில் கொடுக்க செய்யலாம். இதன் மூலம் அவர்களது மனதில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் வெளியே வருவதை நீங்களே பார்த்து ஆனந்தப்படுவீர்கள்.
........Vanisree..

(Courtesy: Dinamani.com)

Sunday, January 25, 2015

தலைவர்களின் கவனத்திற்கு .....

தலைவர்களின் கவனத்திற்கு .....

 01. ஆள் பற்றாக்குறை  களைய :

       அவுட் சோர்சிங் முறையில் அஞ்சல் எழுத்தர் பணிகளை செய்ய மாநில அளவில் டெண்டர் விட கோரிக்கை வைக்கலாமே ...

         மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் தொகையில் ஆட்களை பெற டெண்டர் விடக்கோரலாமே ....

         எத்தனை அங்கிகரிக்கபட்ட காலியிடங்கள் உள்ளனவோ அத்தனை நபர்களை  அவுட் சோர்சிங் நிறுவனத்திடம் பெற்று வேலை செய்ய அனுமதி பெறலாமே ...

      கிராமிய அஞ்சல் ஊழியர்கள் முன்வராத போஸ்ட்மேன், குரூப் டி  காலிப்பணி இடங்களிலும்  இதே முறையை பின்பற்றலாமே ...
                   
       ...டெல்லியில் போஸ்ட்மேன் குரூப் டி பணிகளுக்கு  இம்முறை  உள்ளதாமே ....

     (நீங்கள் அவுட் சோர்சிங் முறையை கொள்கை அளவில் எதிர்க்கலாம் .. ஆனால் ஊழியர்கள், குறிப்பாக RURAL கோட்டங்களில்,  

குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாமலும்.... ,

தேவையான நாட்களில் விடுமுறையில் செல்ல இயலாமலும்.......,

விடுமுறை கிடைக்குமா இல்லையா என்று கடைசி நிமிடம் வரை தெரியாமலும் .... விடுமுறை கிடைத்தாலும் Relieve செய்ய ஆள் வருவாரா மாட்டாரா என்று தெரியாமலும் ....

எவனோ செய்யும் தவறுக்கு Subsidiary Offender  என்ற பெயரில் தண்டனை பெற்றுக்கொண்டும் ......

நாள்தோறும் வாடிக்கையாளரிடமும், நிர்வாகத்திடமும் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும் ...

அட்வான்ஸ் Recruitment (அடுத்த வருட காலியிடங்களுக்கு இந்த வருடமே தேர்வு நடத்தி முடிவும் வெளியிடுவது) ..., 

போஸ்ட்மேன் , MTS  அலுவலர்களை officiating முறையில் எழுத்தராக பணிபுரிய அனுமதிப்பது...

          போன்ற யோசனைகள் நிர்வாகத்திற்கு பிடிக்காத காரணத்தால் இந்த யோசனை முன் வைக்கப்படுகிறது ...  ) 
  


02. ஸ்டேட்மென்ட்கள் (Statements) குறைக்கப்பட்டதா ....? ,


நமது பிரதமர்  அவர்கள் ,

           இந்தியாவைத்  தூய்மைப்  படுத்துங்கள் 


           காகித உபயோகத்தைக்  குறையுங்கள் 


           ஸ்டேட்மெண்ட்களைக்  குறையுங்கள்

    ...     என்றார்.

ஆனால்,  இதுவரை  எந்த      ஸ்டேட்மெண்ட்  குறைக்கபட்டுள்ளது ?.

(வேலை செய்யும் நேரத்தைவிட Statements தயாரிக்கும் நேரம் 


அதிகமாகிவிடும் போலிருக்கிறதே ...)

                           யோசியுங்கள் ......




03. குரூப் இன்சூரன்ஸ் ....


           கிராமிய அஞ்சல் ஊழியர்களின்      குரூப்  இன்சூரன்ஸ் 


தொகையைவிட ...


அஞ்சல்  எழுத்தர்களின் குரூப் இன்சூரன்ஸ் தொகை (Subscription amount & Benefit amount )

குறைவாக உள்ளதாமே ....


                       யோசியுங்கள் ......



04. Vacancy particulars with Exam notification...
    
          நேரடி தேர்வுகளுக்கு விளம்பரம் செய்யும்போதே காலியிடங்கள் 

எத்தனை என்று அறிவிக்கும் நிர்வாகம், இலாக்கா தேர்வுகளில் மட்டும் 

காலியிடங்கள் பற்றிய விபரங்களை தாமதமாக அறிவிப்பது ஏன் ...  

(உ .ம் : Postman, LGO, IP, PM grade exams)

          காலியிடங்கள் பற்றி தெரிந்தால்தானே தேர்வு எழுதுவது பற்றி 
முடிவு செய்ய முடியும் ...

                         கவனியுங்கள் ......


05.  துணை அஞ்சலகங்களில்  QUARTERS  தேவையா... (குறிப்பாக கிராம 
பகுதிகளில் )

           அலுவலகப் பாதுகாப்பிற்காக Quarters-ல் தங்கவேண்டுமெனில், 

பார்ப்பது 
 வாச்மேன் வேலைதானே ... 

           வாட்ச்மேன் வேலைக்கு சம்பளமும், தங்க இடமும் தர வேண்டியது 

நிர்வாகத்தின் பொறுப்புதானே ...

           அஞ்சல் அலுவலர்களின் HRA-ஐ பிடிப்பது எப்படி சரி ...

            பெரும்பாலான அஞ்சல் அலுவலர்கள் குழந்தைகளின் கல்வி,   

பெற்றோரின் மருத்துவ வசதி,   கணவர் / மனைவி வேலை பார்ப்பது 


போன்ற காரணங்களுக்காக  அருகில் உள்ள சிறு நகரங்களில் 


குடியிருக்க வேண்டி உள்ளது.


              துணை அஞ்சல் அதிகாரியாக அதிக பொறுப்புகளையும் Target 

டார்ச்சர்களையும் தாங்கிக்கொள்வதற்கு தண்டனையா .. (HRA Cut).

              
தீர்வு .....

அகில இந்திய அளவில் ஒரு  அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் quarters 

தேவை இல்லாத அலுவலகங்களுக்கு இன்சுர் செய்யலாமே ...
                             
                                          அல்லது 

RPLI விதிகளில், பொருட்களுக்கும்  இன்சூர் செய்யலாம்  என  மாற்றம் 

செய்து , நமக்கு நாமே இன்சூர் செய்து கொள்ளலாமே ... 

(ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ...)


             

நன்றி...    


                 

Tuesday, January 20, 2015

ஆபிஸ்ல இருந்து ஆன் டைமுக்கு கிளம்புங்கப்பா...

                 பலரும், அலுவலகத்தில் பல மணி நேரம் தேமேன்னு உட்கார்ந்து வேலை செய்வார்கள் இல்லைன்னா வேலை செய்ற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. அவங்க ஸ்டைலே தனி.. அலுவலக நேரத்தில் எல்லாம் காத்தாடி உட்டுட்டு, ஓவர் டைம்ல மட்டும்தான் ஒர்க்கே பண்ணுவாங்க…
என்னப்பா கிளம்பலையான்னு கேட்டா, இல்ல.. வேலை இருக்கு,  முடிக்கணும் பொறுப்பா பதில் சொல்லி மத்தவங்க காண்ட அண்டாவுல கொட்டிக்குவாங்க.
இதில், சிலர் காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே தவம் இருந்து பாஸிடம் வரம் வாங்க காத்திருப்பது போல இருப்பார்கள்.
ஒரு சிலர், அலுவலகத்தில் ரொம்ப நேரம் இருந்தா… இவன் ரொம்ப நல்லவன்டான்னு எல்லாரும் சொல்லுவாங்கன்னு தப்புத் தப்பா கணக்கு போட்டு வச்சிருப்பாங்க.
எது எப்படின்னாலும், அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் செய்வது தப்புதான் தப்புதான்.
எப்படி அது தப்புன்னு சொல்ல முடியும்னு நீங்க ஆதங்கத்தோட கேக்குறது புரியுது… அதுக்கு எங்க கிட்ட விலாவரியா தகவல் இருக்குங்க…
வாங்க பாக்கலாம்,
வேலை என்பது முடிந்து விடும் விஷயமல்ல, எல்லா வேலையும் ஒரே நாளில் உங்களால் முடிக்க முடியாது. அதில்லாம.. எல்லா வேலையையும் இன்னிக்கே முடிச்சிட்டா நாளைக்கு வந்து என்னப் பண்ணுவீங்க பாவம்…
அப்புறம், உங்களது வேலையை விட உங்களது குடும்பத்தாரும், குடும்ப உறுப்பினர்களும்தான் முக்கியம். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியமும் கூட.
உங்களுக்கு வேலையில எதான பிரச்னைன்னா ஆறுதல் கூறவும், ஆதரவு தரவும் குடும்பம் இருக்கும். ஆனா, உங்க மனைவி கோச்சிக்கிட்டு போயிட்டா பாஸ் வந்து சமைச்சிப் போட மாட்டார்.
குடும்பமே இல்லை சார்.. நான் தனியா இருக்கேன்னு ஒருவர் அங்கிருந்து குரல் கொடுத்தா அவங்களுக்கும் தனியா நோட்ஸ் போட்டு வச்சிருக்கோம்.. வாங்க சொல்றோம்..
வாழ்கை என்பது வெறும் பணி மட்டும் அல்ல. வேலைக்கு போறதும், இரவில் கிளம்பி சாப்பிட்டுட்டுப் போயி ரூமில் படுத்துக் கொண்டு அறையில் இருக்கும் கொசுக்களுக்கு ரத்த தானம் செய்துவிட்டு, குறட்டை சத்தத்தால் இம்சையும் கொடுப்பதல்ல.
வாழ்க்கை வாழ்வதற்கு, குடும்பமே இல்லையே எப்படி வாழுறதுன்னு கேக்காதீங்க.. எத்தனையோ பேர் சமூக அக்கறையோடு வாழ்கிறார்கள். அதுபோல சமூகத்தில் உங்களின் தேவை தேவைப்படும் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேடிச் சென்று உதவுங்கள். இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியல்ல.. உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் பேருதவி.
எல்லாமே சரி..
நான் ஆபிஸ்ல ரொம்ப நேரம் உட்கார்ந்து டபுள் பிரமோஷன் வாங்கினேன் தெரியுமான்னு சொல்றவங்களுக்கு… சிம்பிள் லாஜிக் மேட்டர் ஒண்ணு.
என்னன்னா.. ஆபிஸ்ல ஒருத்தர் ரொம்ப நேரம் வேலை செய்றார்னா.. அவருக்கு கொடுத்த வேலையை, கொடுத்த  நேரத்தில் முடிக்க தெரியலைன்னு ஊரே பேசுமே அத பத்தி யோசிச்சீங்களா…
ல்ல, உங்க ஒருத்தருக்காக.. ஆபிஸ்ல இருக்குற ஏசி, லைட்,  டீ மெஷின்னு எல்லாமே இயங்கி தேவையில்லாம செலவு அதிகமாகிட்டு இருக்கே அதப்பத்திதான் யோசிச்சீங்களா…
எல்லாவற்றையும் விட மன்னிக்கவே முடியாத குற்றம் என்னன்னா.. பொறுப்பா ஒருவன் வேலை எல்லாம் செஞ்சிட்டு, குடும்ப பொறுப்பை சுமக்க சரியான டைமுக்குக் கிளம்புவான். அவனை டீம் லீடர் மொறைக்கிறதுக்கும் காரணமா இருந்துடுவாங்க.. இதனால, உங்க டீம்ல இருக்க எந்த செட்டுக்கும் உங்கள புடிக்காம போறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு…
இப்படி எதையும் யோசிக்காம… கிணத்துல போட்ட கல்ல்ல்லு மாதிரி வேலை செய்றத விட்டுவிட்டு, வீட்டுக்குப் போனால், அம்மாவுக்கு காய்கறி வாங்கித் தரலாம், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மனைவிக்கு காய்கறி நறுக்கித் தரலாம். இதெல்லாம் என்னால செய்யவே முடியாதுன்னு கையை தூக்குறவங்க.. வெட்டியா வீட்டிலே உட்கார்ந்து டிவியயாவது பார்த்து.. இவன் வீட்ல ஏன்டா இருக்கான்னு மத்தவங்க நிம்மதியையாவது பறிக்கலாம்.
என்ன நாங்க சொல்றது தப்பில்லையே…
....Vaanisree Sivakumar.
(Courtesy : Dinamani)