Wednesday, October 28, 2015

from tamil.thehindu.com

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு ஒரு அம்மணி மைக்கோட அதிரடியா வர்றத டி.வி.யில பார்த்திருப்பீங்க. அதேமாதிரி, ‘உங்க சாப்பாட்டுல பீப் இருக்கா?’ன்னு கேட்டு ஒரு கும்பல் வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுமோன்னு பயமா இருக்கு, நாட்டு நடப்பைப் பார்க்கும்போது.

அதுக்கு முன்னாடி, நம்ம வீட்ல யார் யார் என்னென்ன சாப்பிடுவாங்கன்னு கொஞ்சம் யோசிங்க. ஒருத்தருக்கு கத்தரிக்கா பிடிக்காது. இன்னொருத்தருக்கு பாகற்காயைப் பார்த்தாலே குமட்டும். சில பேரு உப்புமான்னு சொன்னாலே உதைக்க வந்துடுவாங்க.

எங்க வீட்ட எடுத்துக்கிட்டா, சுப்பையா தாத்தா சைவம். தேனம்ம பாட்டிக்குக் கருவாடுன்னா உசிரு. அப்பா வுக்குக் கருவாடும் நாட்டுக்கோழியும்தான் ரொம்பப் பிடிக்கும். மீனை வெச்சா எந்திரிச்சி ஓடிடுவாரு.

அம்மாவுக்கு அயிரை மீனும் ஆட்டுக்கறியும்தான் இஷ்டம். கோழிக்கறிய தொட்டுற மாட்டாவ. கேட்டா, “ச்சேய்! அது எதையெல்லாம் திங்குது தெரியுமால? பன்னிக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?”ன்னு திருப்பிக் கேப்பாவ.

பெரியக்காவுக்கும் கோழி ஆகாது. சின்னக்காவுக்கு பிராய்லர் கோழியும் ஆட்டெலும்பும் உசிரு. என் மனைவியோட சாப்பாட்டப் பத்தி சபையில சொல்றது எனக்கு நானே வெச்சுக்கிற ஆப்பு. எனக்குக் கருவாடு ஆகாது. ஆனா, சின்ன வயசுல பசங்களோட சேர்ந்து எலிக் கறி தின்னிருக்கேன். என்னையும் எங்க அண்ணனையும் அனைத்துண்ணின்னு சொல்லலாம். எங்க சாப்பாட்டுல்ல ‘பீப்’ இருக்கு. என் மவன் நண்டு திங்கிற அழகே அழகு. “பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத் துண்டம் எனக்கு”ன்னு கேட்டுத் திங்கற பய.

விஷயத்துக்கு வருவோம்… ஒரு குடும்பத்துக்குள்ளயே சாப்பாட்டு விஷயத்துல இத்தனை முரண்பாடு இருக்கும்போது, நாட்டுல இருக்காதா? அப்புறம் ஏன் புரட்சி போராட்டம்னு ‘சீப்பாய்’ கலகம் பண்றீங்க?

நன்றிப் பெருக்கும் எச்சிப் பெருக்கும்
ஆஹா, இவன் ‘மாட்டுக்கறி விருந்து’ல கலந்துக்கிற ஆளுபோலன்னு சட்டுன்னு முடிவுக்கு வந்திறாதீங்க. பத்து வருஷமா மாடும் மாடு சார்ந்த இடத்துலேயும் வாழ்ந்தவன் நான். என் கண்ணு முன்னாடி நடந்த பசு பிரசவத்துல பொறந்த பயதான் சின்னக்கண்ணன். சேட்டைக்காரனா இருந்தாலும், எம்மேல அவனுக்குத் தனிப் பாசம். எனக்கும்தாம். பள்ளிக்கோடம் விட்டு வரும்போதே, ஒரு குத்து பசும்புல் கொண்டாந்து அவனுக்கு வூட்டுன பிறகுதான் விளையாடவே போவேன்.

கொஞ்சம் வளந்ததும் அவனையும் மேச்சலுக்கு அனுப்புனாவ பெரியம்ம. மாடுகள மேயவுட்டுட்டு, கருவமர நெழல்ல உக்காந்து சாணி வண்டு, குழிநரிப் பூச்சியோட வெளையாண்டுக்கிட்டு இருந்தேன். சின்னக்கண்ணன் ஒரு மாதிரி கத்துனான். அழுவுற மாதிரி இருந்துச்சி. பதறிப் பக்கத்துல போனா, தலைய ஒரு மாதிரி சிலுப்பிக்கிட்டு, வலது காலத் தூக்கித் தூக்கிக் காட்டுனான். பூச்சி எதுவும் கடிச்சிருக்குமோன்னு பயம். கவனிச்சிப் பார்த்தப்பதான் தெரிஞ்சுது, அவனோட கால்ல பெரிய நீர்க்கருவ முள்ளு குத்தியிருக்குதுன்னு. அத எடுத்துவுட்டதும், அவன் மூஞ்சியில சந்தோஷத்தப் பாக்கணுமே. என்னைய நக்கி எடுத்து, நன்றிப் பெருக்க எச்சிப் பெருக்கா ஆக்கிட்டான்.

அடுத்த பத்தாவது வருஷம், ராமநாதபுரத்துல ஒரு ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன். காலையில 9 மணியில இருந்து ராத்திரி 11 மணி வரைக்கும் வேலை. ராத்திரியும் அங்கேயே தங்கிறணும். வார லீவும் கெடையாது. சம்பளம் வெறும் 1,500 ரூபா. செகண்ட் ஷோ சினிமா, வாரப் புத்தகம் படிக்கிறதுதாம் ஒரே பொழுதுபோக்கு. மிச்சக் காச வெச்சி மாசத்துக்கு 90 தடவ ஓட்டல்ல சாப்பிடணும். பிளாட்ஃபாரக் கடையில சாப்பிட்டாலும், வயித்துக்கும், பர்சுக்கும் பற்றாக்குறை வந்திடும்.

மறக்க முடியாத பிஸ்மி
காலையில இட்லி. மத்தியானம் லெமன் சாதம், தயிர் சாதம். ராத்திரி மறுபடியும் இட்லி, தோச. இருவத்தோரு வயசுப் பய இப்படி அரைப் பட்டினி கெடந்தா எப்படியிருக்கும்? புரோட்டோ திங்க நாக்கு துடியா துடிக்கும். கடைக்குப் போனா, அப்படியே ‘சிக்கன் 65’ திங்க ஆசை ஆசையா வரும். காசு இருக்காது. அப்பதான் பிஸ்மி கடையைக் கண்டுபிடிச் சேன். 20 ரூபாய்க்கு ‘பீப் 65’ தருவாங்க. சும்மா பஞ்சு மாதிரி இருக்கும். என் பசிப்பிணி போக்கிய பிஸ்மி கடையைச் சாகும் வரை என்னால மறக்க முடியாது.

என் நண்பன் ஒருத்தன், “ஒரு இந்து மாட்டுக் கறி சாப்பிடலாமாடா, அதுவும் கன்னுக்குட்டிக் கறிய?”ன்னு திட்டினான். அவன் பேசுன பேச்சுல எனக்குக் குற்ற உணர்ச்சி வந்திடுச்சி. என்னம்மோ, சின்னக்கண்ணன நானே கொன்னு தின்னுட்டது மாதிரி ஃபீல் பண்ண வெச்சிட்டான்.

அறிவுரை சொல்றவன் ஒருபோதும் நம் பசியை ஆத்தப்போறது இல்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் பீப் சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் அன்னைக்குத்தான் விளங்குச்சி.

வீட்ல ஆடு, மாடு வளர்க்கிறவங்க அதை மத்தவங்க சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது இல்ல. அதேமாதிரி சாப்பிடுறவங்களும் இது இந்துக்களோட புனித விலங்கு; அதனால அதக் கொன்னு திம்போம்னு சிந்திக்கிறதில்ல. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டே, சச்சரவு பண்றது எதற்காக? அதுதான் இந்துத்துவா அரசியல்!

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பு களுக்கு கிராமத்தான்கள் சொல்வது ஒண்ணுதான். உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம்னு நீங்க சொல்றது உண்மைன்னா, அது இத்தன நூற்றாண்டா தாக்குப்பிடிச்சி நிக்கிறதுக்குக் காரணம், அதில் இருக்கிற சகிப்புத்தன்மைதான். இந்துத்துவாங்கிற பேர்ல அதைக் கெடுத்துறாதீங்க.

அரசியல் பண்ணத்தான் செய்வோம்னா, அதுக்கு ஒரு யோசனை சொல்றேன். கடந்த 13 வருஷத்துல நான் எரநூத்திச் சொச்சம் அசைவ ஓட்டல்ல சாப்பிட்டுருக்கேன். எங்கு மட்டன் சாப்பிட்டாலும், ‘இதெல்லாம் மட்டன்தானா? இல்ல மாடா?’ங்கிற சந்தேகம் தொடருது. குடும்பத்தோட சாப்பிடப்போற எல்லா இந்துக்களுக்கும் இதே சந்தேகம் வரும்னு நினைக்கிறேன். அதனால, உங்க ‘அரை டவுசர்களைப்’ பூராம் இந்த மாதிரி ஓட்டல்களுக்குக் கங்காணியா போட்டு நம்ம கலாச்சாரத்தைக் காப்பாத்துங்க. அதே மாதிரி டாஸ்மாக் பார் சைடிஷ்களையும் மேற்பார்வையிடுங்க.

நாட்டுல மொத்தம் எத்தனை பிஜேபி, ஆர்எஸ்எஸ்காரங்க இருக்காங்களோ அத்தனை பேரும் இந்த மாதிரி ‘பொதுச் சேவை’க்குப் போயிட்டிங்கன்னா, வீட்ல அவனெவனுக்கு என்ன பிடிச்சிருக்கோ அத நிம்மதியா சாப்பிடலாம் பாருங்க.

அப்புறம் கேரளாவுக்குக் கொஞ்சம் சிறப்புக் கவனம் செலுத்துங்க. ஏன்னா, ‘மாட்டுக் கறி சாப்பிடுறத நாங்க எதிர்க்க முடியாது’ன்னு கேரள பாஜக தலைவரே சொல்லிட்டாரு. அதை முறியடிக்கதுக்கும் ஒரு ஐடியா சொல்லுதேன் கேட்டுக்கோங்க.

காளை வன விலங்கு… பசு?
போன ஆட்சியில மத்திய காட்டிலாகா அமைச்சரா இருந்த ஜெய்ராம் ரமேசு, சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகளைக் காட்சிப்படுத்தவோ, வித்தை காட்டவோ கூடாதுன்னு ஏற்கெனவே இருக்கிற சட்டத்துல, 2011ல ஒரு திருத்தம் பண்ணுனாரு ஞாவகம் இருக்குதா? அந்தப் பட்டியல்ல காளை மாட்டையும் சேர்த்துட்டாரு. காளை வன விலங்காம் (ஆனா, யானையைச் சேர்க்கலை).

காளை வன விலங்குன்னா, அதோட துணைவியார் பசுவும் வன விலங்குதான? அதனால, மாட்ட வெட்டுத வனையும், மாட்டுக் கறியச் சாப்புடுதவனையும் புடிச்சி வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்துல 7 வருஷம் உள்ள போடுங்க. மாட்டுக் கறி விற்கத் தடைன்னு சட்டம் போடாமலே அத கேரளாவுல அமல்படுத்துன சந்தோஷம் உங்களுக்கு. எங்க ஜல்லிக்கட்டைக் கெடுத்த ஜெய்ராம் ரமேசை மாட்டுக் கறி திங்கவிடாம ஆக்குற சந்தோஷம் எங்களுக்கு. எப்படி டீல்?

திராவிடக் கட்சிகள் ஆட்சியிலேயே ஆடு, மாடு, கோழிய கோயில்கள்ல வெட்ட தடைச் சட்டம் போட முயற்சி பண்ண ‘முற்போக்கான’ மாநிலம்தான் தமிழ்நாடு. ஆளுங்கட்சி உதவியோட தமிழ்நாட்டு லேயும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்திட்டீங்கன்னா போதும். முரண்டுபிடிக்கிற தமிழ்நாடும், கேரளாவும் உங்க கைக்குள்ள வந்துடும். அப்புறம் என்ன, இந்தியாவே உங்க கண்ட்ரோல்தான?

அப்படியே, மாட்டைக் கடிச்சி, ஆட்டைக் கடிச்சி கடைசியில அசைவத்துக்கு எல்லாம் தடை போட்டுருங்க. பருப்பு விலை கிலோ பதினெட்டாயிரம் ரூபா ஆகிரும். அப்புறம் என்ன… 2016 சட்டசபைத் தேர்தல்ல உங்க பருப்பு நல்லாவே வேகும்! வாழ்த்துகள்!
கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

No Exams...?

அஞ்சல் சங்கத்தலைவர்களுக்கு...

 மறந்துவிட்டீர்களா ...?

தேர்வுகள் எப்போது... ?

1. LGO 2015 Examination- [MTS/POSTMAN to PA]


2. Residual 2013-[ Left out LGO 2013 vacancies-GDS to PA]

3. Residual 2014-[ Left out LGO 2014 vacancies-GDS to PA]

4. Postmaster Grade 2015.

[இந்த தேர்வுகள் நடந்தால்தானே PA Cadre -ஆட்பற்றாக்குறை குறையும் ...]

நன்றி ...

Thursday, October 22, 2015

from www.tamil.thehindu.com...

அஞ்சாப்பு படிச்சப்ப, திடீர்னு ரஜினி, ராமராஜன் ரசிகர்களுக்குள்ள சண்ட வந்திருச்சி. அவங்க ரஜினியை ‘காக்கா வலிப்பு’னு சொல்ல, நாங்க ராமராஜனை ‘டவுசர்’னு ஏச பிரச்சன பெருசாயிட்டு. உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் முடிஞ்ச நேரம்போல, ‘யாரு பெரியாளுன்னு ஓட்டுப்போட்டுப் பாத்திருவோமால’ன்னு ஒருத்தன் சவால் வுட்டான். ‘இன்னைக்கு சாயங்காலம் ஒண்ணுக்கு மணி அடிச்சதும் எலெக் ஷன்டா’ ன்னு நாங்களும் பதில் சவால் வுட்டோம்.

காம்பஸ் டப்பா தான் ஓட்டுப் பொட்டி, குச்சி தான் ஓட்டு. ஒரு டப்பாவுல முருங்கப்பசையை வெச்சி ரஜினி படத்தை ஒட்டுனோம். இன்னொரு டப்பாவுல சோத்துப்பசைய வெச்சி ராமராஜன் படத்தை ஒட்டுனாம் இலங்காமணி. வாக்குப்பதிவு தொடங்குச்சி. ஊரான் டப்பாவுல குச்சியை எவன்தான் போடுவான்? ஓட்டுப்பூத்து வெறிச்சோடிப்போச்சு.

எங்கப்பாவும் கடைக்காரரு, இலங்காமணியோட தாத்தாவும் கடைக்காரரு. ரெண்டு பேரும் குச்சிகள ஓசியா குடுத்து வகுப்பு பயல்வலப் பூராம் ஓட்டுப் போட வெச்சோம். “அவன் நாலு குச்சிதான் குடுத்திருக்கான். நாம மொத்தம் ஆறு குச்சி குடுத்திருக்கோம். கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்”னு வீரன்மாடசாமி எங்காதுக்குள்ள ஓதுனான். நம்பிக்கையோட, ஓட்ட எண்ண ஆரம்பிச்சோம். ரஜினிக்கு 24 ஓட்டு விழுந்திருந்திச்சி. மொத்த ஓட்டே முப்பத்தாறுதாம். ஜெயிச்ச சந்தோஷத்துல, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் கொழந்தையும் சொல்லும்’னு பாட்டுப்படிச்சி முடிய கோதிவிட்டோம். 

“செத்தநேரம் சும்மா இருங்கலே, ராமராஜனுக்கு 32 ஓட்டு விழுந்திருக்கு”ன்னு அவனுவ சொன்னானுவ. ஏமாத்துறானுவளோன்னு மறு எண்ணிக்கை வெச்சோம். எப்பிடிப்பாத்தாலும் 32 ஓட்டு வந்துருச்சி. பொறவுதான் உண்மை தெரிஞ்சுது. நாங்க ஒரு குச்சிய நாலுநாலா உடைச்சி ஓட்டுப் போட்டா, அந்தப் பக்கிக எட்டெட்டா உடைச்சிப் போட்டுருக்கானுவ. பூரா குச்சும் எலிப்புழுக்கை தண்டித்தான் இருந்துச்சி. பொறவென்ன, ரஜினியையே தோக்கவெச்சி, ராமராஜன் செயிச்சிட்டாரு.

நடிகர் சங்கத் தேர்தல்ல சரத்குமாரு அணி முன்னிலைங்கிற செய்தியைக் கேட்டதும், எனக்கு அந்தப் பள்ளிக்கோடத்து தேர்தல் ஞாவகம் வந்துருச்சி. ரெண்டு தேர்தலுக்கும் ஆறு வித்தியாசம்தாம். எங்க பள்ளிக்கோடத்துல ஐடி கார்டு கெடையாது. சரத்குமார், ராதாரவி, நாசர் எல்லாம் ஸ்கூல் பசங்க மாரி ஐடி கார்டு போட்டுருந்தாங்க. தேர்தலப்ப நாங்க ஒண்ணு ரெண்டு கெட்டவார்த்தைய அர்த்தம் தெரியாமப் பேசிக்கிட் டோம், இவங்க வெவரம் தெரிஞ்சே சாதியைச் சொல்லி சண்டை போட்டுக்கிட்டாங்க. எங்க தேர்தல்ல பக்கத்து கிளாஸ் பையங்கள எல்லாம் ஓட்டுப்போட விடலை. இங்க கே.எஸ்.ரவிக்குமார், கங்கை அமரன் எல்லாம் ஓட்டுப்போடுறாங்க (அவங்களும் நடிகர்களாம்!) நாங்க யாரையும் தடுக்கல, இங்க, சரத்குமார் செட்டு நடிகரான மன்சூர் அலிகானையே ஓட்டுப்போடவிடல. நாங்க யாரும் அழல, யாரையும் தள்ளியும்விடல. இங்க அதுவும் நடந்துச்சி.

இன்னொரு முக்கியமான விஷயம் ர, ரா தேர்தலைப் பத்தி எங்க வாத்தியாருக்கே தெரியாது. இவங்க தேர்தல் ஆரம்பிச்சதுல இருந்து முடியிற வரைக்கும் நாலு டிவியில லைவ் பண்ணுனாங்க. இந்த விஷயத்துல நடிகர்கள குறை சொல்லுததா, டிவிகாரங்கள குறை சொல்லுததான்னு ஒண்ணும் புரியல. நல்ல வேள என் எதிர்பார்ப்புக்கு மாறா, சரத்குமாரு தோத்துட்டாரு. இல்லன்னா விருதுநகர்ல பிரம்மாண்டமான காமராஜர் மணிமண்டபமும், சென்னையில சிவாஜி மணிமண்டபமும், வானுயர்ந்த நடிகர் சங்கக் கட்டடமும் கட்டுன மாரி, சீனியர் உறுப்பினர்களுக்காக ஆயிரம் சதுரடியில இலவச வீடு கட்டிக் குடுக்கும் பணிக்கு தன்னையே அர்ப்பணிச்சிருப்பாரு. ஏற்கெனவே சமத்துவ மக்கள் கட்சியைத் தனியாளா நடத்தி வார அவருக்கு கூடக்கொஞ்சம் கஷ்டத்தக் குடுத்திறக்கூடாதுன்னுதாம், மிச்ச நடிகர்க எல்லாம் நாசருக்கு ஓட்டுப்போட்டிருக்காங்கபோல.

இதுக்கு நடுவுல, சங்கத்துப் பேர தமிழ்நாடு நடிகர் சங்கம்னு மாத்தணும்னு பாரதிராஜா சொன்ன கருத்த தன்னோட கருத்து மாரியே ரஜினியும் சொல்லிட்டாரு. அவர் என்ன சொன்னாலும் எதுத்துப் பேசுற கமலு, இந்திய நடிகர் சங்கம்னு புதுக்குண்டை போட (நல்ல வேள, உலகநாயகன் சங்கம்னு சொல்லல) ‘ரெண்டும் வேணாம். நடிகர் சங்கம்னு பேரு வைங்கப்பா போதும்’னு தலைவன் கவுண்டமணி தீர்ப்புச் சொல்லும்படியா ஆயிடுச்சி.

ஓட்டுப்போட வந்த எல்லாத்தையும் மாரி நினைச்சிக்கிட்டு விஜயகாந்த்கிட்ட நிருபர் ஒருத்தர் கேட்டாரு, ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எப்படியிருந்துச்சி?’ன்னு. ‘தமிழ்நாட்டுல எனக்கே பாதுகாப்பில்ல. மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, அதைவிட்டுட்டு நடிகர்களுக்குப் பாதுகாப்பு இருக்கான்னு கேட்கீங்களே? அய்யோ அய்யோ’ன்னு போய்ட்டாரு. இந்த விஷயத்துல, நாம ஹீரோன்னு கொண்டாடுத ஆளுங்க காமெடியனாவும், காமெடியன்னு சொல்லுத ஆளுக ஹீரோவாவும் இருக்காங்க பாருங்க. நடிகர் சங்கத் தேர்தல் முடிவு வந்திருச்சி... இனிமே பருப்பு விலை கொறைஞ்சிரும்னு நாம கிண்டல் பண்ணிட்டு இருக்கோம். நடிகர் தேர்தல் என்னதான் காமெடியா இருந்தாலும், ‘இனிமே வாக்குறுதிய நிறைவேத்த முடியலன்னா ராஜிநாமா பண்ணிறணும்’னு சில குரல்க பளிச்சுன்னு கேட்டுச்சே கவனிச்சீங்களா? நாம அப்படிக் கேக்க முடியுமா? முதல்ல நம்மாளுக என்னென்ன வாக்குறுதி குடுத்தாங்கன்னு ஞாவகமாவது இருக்கா?

உதாரணத்துக்கு 2011 அதிமுக தேர்தல் அறிக்கை ஞாபகம் இருக்கா? தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூவா கடனாளி மாநிலங்கிற தலைக்குனிவுல இருந்து மீட்போம்னாங்க, மின் உற்பத்தியைக் கூட்டுவோம்னாங்க, போக்குவரத்துத் துறைய நவீனமயமாக்குவோம், விமானக் கருவிகள் தயாரிப்பு மற்றும் பழுது பார்க்கும் தொழிற்சாலையுடன் கூடிய ஏரோ பார்க் தென் தமிழகத்தில் அமைக்கப்படும்னாங்க, சென்னைய தவுத்து தமிழ்நாட்டோட தெக்கு, கிழக்கு மேக்கு பகுதியிலேயும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்னாங்க, சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மோனோ ரெயில் விடப்படும்னாங்க, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள செறப்பா செயல்படுத்துவோம்னாங்க, குறைஞ்ச கட்டணத்துல அரசு கேபிள் இணைப்புன்னாங்க, தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகவும், இந்திய ஆட்சி மொழியாகவும் ஆக்கி, தமிழில் படிச்சவங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவோம்னாங்க, வறுமைக் கோட்டுக்குக் கீழ உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் தருவோம்னாங்க, இன்னும் எவ்வளவோ கெடக்கு. சொன்னதுல நடந்தது என்னன்னா, விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், ஆடு, மாடுதான் கரெக்ட்ரா வீடு வந்து சேந்திருக்கு. மிச்சமெல்லாம் என்னாச்சு? ஞாபகம் இருக்கா? அவங்களும் மறந்துட்டாங்க, நாமளும் மறந்துட்டோம்!

நாம, வெறும் மூவாயிரத்துச் சொச்சம் ஓடடுள்ள நடிகர் சங்கத்தை ஏமாத்துனவங்கள கலாய்க்கோம். முழுசா மூணரைக்கோடி ஓட்டப் போட்டுட்டு பேந்தப் பேந்த முழிக்கோம். நடிகர்களப் பத்தி சிந்திச்சது போதும், அடுத்து நம்ம தேர்தல் வரப்போகுது மக்களே, கொஞ்சம் அதப்பத்தியும் யோசிங்க. இதைவிட பெரிய வாக்குறுதிப் பட்டியலோட ஸ்டாலினும், அன்புமணியும் வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள நிப்பாட்டி ரஜினி மாரி கேள்வி கேளுங்க - உங்க வாக்குறுதிகள குறிச்ச காலத்துல செய்ய முடியலைன்னா ராஜிநாமா பண்ணிடுவீங்களான்னு. அப்படியாது மாற்றம், விடியல் வருதான்னு பாக்கலாம்!
- கே.கே.மகேஷ்,

Wednesday, October 21, 2015

Bonus raised from next year...

The Cabinet decided to double the wage ceiling for calculating bonus to Rs 7,000 per month for factory workers and establishments with 20 or more workers.

"The Payment of Bonus (Amendment) Bill, 2015 to enhance the monthly bonus calculation ceiling to Rs 7,000 per month from existing Rs 3,500 was approved by Union Cabinet here," a source said after the Cabinet meeting.

The amendment bill will be made effective from April 1, 2015. (this means, increased bonus will be paid from 2016 onwards)


Tuesday, October 13, 2015

Congrats...

Smt. S. Kanimozhi, 
IP, Namakkal West Sub Division, 
Namakkal 637001
has been allotted to Western region and posted as 
ASP(HQs), 
Namakkal Division, 
Namakkal  637001
-on promotion.

Likely to join on 23.10.2015.

Wednesday, October 7, 2015

Bonus orders released...


Bonus orders released... 

Postal: 60 days...

Railways: 78 days...

(உச்ச வரம்பு ...?
அதே 3500/-. உயர்த்தப்படவில்லை.
வாழ்க ... நமது சங்கங்கள் ...)

Friday, October 2, 2015

Strike deferred...



National JCA has deferred the proposed Indefinite strike from 23.11.2015.

Strike may be held during February 2016 to April 2016.

Exact date will be announced later.

Reason for postponing the strike: 
           Delay in submission of Pay commission report.

[Postal unions have already declared that the Indefinite strike  in Postal Department will start on 23.11.2015, even if Unions of other Departments like Income Tax, Railway etc decide to defer it.]