Wednesday, March 18, 2015

One day strike on 26 03 2015..in TN Postal Circle..

From nfpecoimbatore.blogspot.in
-----------------------------------------------------
..வேலை நிறுத்தம் ....

எமது கடைசி ஆயுதம் அல்ல ...அதுவே முதல் .....

ஆங்கிலேயன் கூட இப்படி 
அடிமை படுத்தியதில்லை ...........
ஆணவம் கொண்டதில்லை ...............
ஆள் கொடுக்காமல் பணி கேட்டதில்லை ..
அளவு பார்த்ததில்லை ..இப்படி 
அக்கிரமம் செய்ததில்லை ...
சுயநலம் கொண்டவர்கள்  என்ற பேர்  எடுத்ததில்லை ..
தனிச்சையாக சுட்டதில்லை ...
தண்டனை தந்ததில்லை ....

வட்டியை உயர்த்த ..முற்படாமல் ...
வெட்டியாய் ..
கணக்குகள் தொடங்க சொல்கிறார் ...

ஆயிரம் பேர் உள்ள ஊரினில் .....
அறுபது கணக்குதான் இருக்கும் ..போது 
குறை ..ஊழியர் மேல் இல்லை ..
அந்த கணக்கின் காரணம்தான் ..என்பது புரியவில்லை ..

மெத்தபடித்த மேதாவிகள் கூட ..
யோசித்துதான் செய்வார்கள் ...

யோசித்து படித்த மேதாவிகள் ...
மெத்தனமாக செய்கிறார்கள் ............

சித்தாள் எல்லாம் மேஸ்தரி வேலை பார்க்க சொல்லி ...
மேசன்எல்லாம் .சித்தாள் ஆகி .....
மேஸ்தரி வாயில் ..துணி அடைத்து ..
சித்தாள் சொல்வதை மேஸ்தரி கேட்டு ...
கட்டிட மொதலாளியை CONFUSE ஆகி ..
கடைசியில் ..
அனைவருக்கும் ...சேர்த்து ..
கட்டி முடிந்ததோ ..

சமாதி..............

சேவையை சேவையாக செய்த காலம் போய் ..
அதை 
வியாபார சேவையாக மாறியது ..இங்கே..

வியாபாரம் செய்ய தெரியாதார் எல்லாம் ..
வியாபாரி ஆனார் ...
வாங்குபவர் ..யாரென்றே தெரியாமல் ..
வியாபாரம் செய்கிறார் ....

மலையாய் பற்றாகுறை இருக்க ..
தவிடு பொடிக்கு 
வணிகம் செய்கிறார்..

கேட்டு பார்த்தோம் ....கிடைக்கவில்லை ........
நோட்டீஸ் கொடுத்து பார்த்தோம் ....அசரவில்லை ...
கொஞ்சம் தட்டி பார்த்தோம் ..திறக்கவில்லை .....
கோஷம்  போட்டு பார்த்தோம் ..செவி மடுக்கவில்லை ..
இனி ..
தடி எடுப்போம் ...
கொடி சேர்ப்போம் ...
அணி திரள்வோம் ...
படையெடுப்போம் ....
வெற்றி நமதே ..... வெற்றி நமதே .......வெற்றி நமதே ...strike pictures க்கான பட முடிவு

No comments:

Post a Comment